Friday, 27 June 2014

நண்பர்கள் இல்லா உலகம்

கண்ணீரை சந்திக்கிறேன் முதன்முறையாக
நீ இல்லாதபோது...
தனிமையில் தான் வாழ்கிறேன் -நீ
இல்லாத ஊரில் ...
மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ள
நண்பனே நீ இல்லை அதனால்
மகிழ்ச்சியை நான் உணர்வதே இல்லை!

அனைத்தையும் கற்றுத்தந்த நீ
நீ கற்றுக்
கொடுக்கவில்லையடா
உன்னை பிரிந்து வாழ ...

என் கரங்களாக இருந்தாய் -நீ
இல்லாத பொழுதிலே என் கண்கள்
உன் பிரிவிலே கண்ணீர் சிந்துதடா!

என் கண்கள் கலங்கினால்
உன் உதிரம் கொதிக்குமடா
இன்று உன்னை பிரிந்து வாழ்கிறேன்
கண்ணீரோடு அதை துடைக்க உன் கைகள்
வருவாயா........?

No comments:

Post a Comment