Friday, 27 June 2014

"கண்ணீர்ச்சுமை"

"கண்ணீர்ச்சுமை"

விழிகள் கனக்கின்றன
கண்ணீர்ச் சுமையால் ..
துயரத்தின் சுவடுகள்
கண்ணீர்க் கோலங்களாய்
முகம் முழுவதும் ..!
அழுகிறேன்...
இனி அழுவதற்கு
கண்ணீர் இல்லையெனும் வரை .. !
துடைப்பதற்கு விரல்கள்
வருமென துயரத்தை கொஞ்சம்
மிச்சம் வைத்தேன் .. !

நொடிகளில் தொடங்கி
நிமிடங்களில் விரைந்து
மணித்துளிகள் மறையும் பொழுது
உணர்ந்தேன் இன்னும் எந்த விரல்களும்
எந்தன் கண்ணீரை கோத
வரவில்லை,
பாவம் அவர்களுக்கு
வேறு வேலை இருந்திருக்கும்....

உப்பு நீர் பட்டுக்
கரித்த உதடு
வறட்டு
புன்னகையில் விரிந்தது
விதியை உணர்ந்து ..

குனிந்து கைகளைப்
பார்த்தேன் பத்து
விரல்கள் இருந்தன
என்னிடமே ..
நானே அறியாமல்
விக்கித்து நின்ற போதிலே
விழிநீர் கரைபுரண்டோடியது ,
மகிழ்ச்சி வெள்ளத்தால் அல்ல !
பிறர் கையை
எதிர்பார்த்து என்கையை
நானே மறந்து போனேனே என்று !!
கெளதம் இளங்கோ

No comments:

Post a Comment