Friday, 27 June 2014

அன்னையர் தினம்

அனைவருக்கும் அன்னையர் தின நல்வாழ்த்துக்கள்

என் உயிரும் உணர்வுமாகிய 
என் அன்னைக்கு சமர்ப்பணம்...

வலியை தாங்கி
பிறவி கொடுத்தவள்
ரத்தம் முறித்து
பாலாய் கொடுத்தவள் ............

இறக்கம் கொண்டவள்
உறக்கம் மறந்தவள்
பட்டினி கிடந்தாலும்
என் பசியை ஆற்றியவள் .............

இரவு பகலாய்
காத்து வளர்த்தவள்
என் தமிழ் கல்வியை
அறிமுகம் செய்தவள் ...........

பற்கள் முளைக்க
நெல்லால் கீரியவள்
முற்கள் கிழித்ததும்
அலறி துடித்தவள் ...............

கொட்டும் பணியிலும்
அடைக்கலம் கொடுத்தவள்
கொளுத்தும் வெய்யிலிலும்
குடையென தொடர்ந்தவள் ..........

அன்பில் கடவுள் அவள்
அறிவில் ஆசான் அவள்
என் நெஞ்சில் நின்றவள்
நினைவில் நிறைந்தவள் ...............

எவரும் அறியாத
என்னை அறிந்தவள்
என் நலம் நாடும்
என்னுயிர் தோழி அவள் ...........

உயிரை கொடுத்தவள்
உடலை வளர்த்தவள்
ஒழுக்கம் சொன்னவள்
என் உயிராய் ஆனவள் ...............

என்னையே தேடும்
என்றும் அவள் விழி
கருணை கொண்ட
கடவுளே அவள் மொழி ............

என்னுடையது அனைத்தும்
அவளது கொடையே
அவளை தொழுது
வாழ்வதும் வரமே ................

அன்னையர் தினத்தில்
மட்டும் இல்லாமல்
என்று போற்றுவோம்
அன்னையை தெய்வமாய் ..............

அன்னையர் தின வாழ்த்துக்கள் அம்மா......

கெளதம் திலகவதி இளங்கோ..

No comments:

Post a Comment