Friday, 27 June 2014

சுதந்திர தினம்


பெரும்பானமையெனும் பேரிரைச்சலில் வெள்ளப்பெருக்கி­ன் வீரியமாய் அடித்துச் செல்லும் சிறுபான்மையின் பெருகுரல்...

ஒரு விடியலுக்கான காத்திருப்பில் அன்றாடம் வேர்வையாய் சிந்தும் உதிரத்துளிகள் கணக்கெடுப்பில் வருவதில்லை நிர்ணயித்த கொடைக்கூலியால்...

விலைவாசி அரக்கனின் கொடூரப்பசியில் குரல்வலை சிக்கி நசித்துக் கொண்டிருக்கும் எங்களுக்கு கொண்டாட்டமாய் பேரில் மட்டுமே புழங்குகிறது இந்த சுதந்திர தினம்..

ஒரு விடியலுக்கு காத்திருப்பு முடிவுக்கென சில பிணக்காய் பல ஆரம்பத்திற்குஅகம் மகிழபொய்கள் புறவாழ்வு வெறுத்து மரணம் வாங்கி மனமகிழ்தல் வினாக்களோடு வீதி வலம் புறக்கணிப்பு தெளிதல் இழத்தல் உணர்தல் ஊழியம் போதும் இந்த பெருவாழ்வென ஒய்வெடுக்கும் போது விஸ்வரூபம் எடுக்கும் முதுமை என்னும் இயலாமை முடியும் வரை நிமிரவே நேரமின்றி முடிந்து போகிறது எங்கள் பிறவி இருந்தும் தன்னம்பிக்கை தளர்வதில்லை எங்களுக்கு வறுமை கோட்டை சற்று தளர்த்தி தான் ஓய்கிறோம் எங்கள் சந்ததிகளுக்கு கல்வியென்னும் களஞ்சியத்தை காட்டி..!


கெளதம் இளங்கோ

No comments:

Post a Comment