Friday, 27 June 2014

ஓடலும் தேடலும்

ஓடலும் தேடலும்
தினசரி வாழ்க்கையில்
மிக முக்கியமாகி போனது…

ஒவ்வொரு தேடலின் முடிவில்
மற்றொரு தேடல்
நம்மை கேட்காமலே
பிறந்துவிடுகிறது…

ஒவ்வொரு நாளும்
மணித்துளிகளின் கரைப்பில்
கரைந்துக் கொண்டேபோகிறது…

மணித்துளிகளில்
கரைந்து போகும் நாட்களாய்
நம் ஒவ்வொருவரின்
விடியலிலும் ஏதோ
ஒரு தேடல்
பிறந்துக் கொண்டேயிருக்கிறது

மரணம் பிறகு ஜனம்
என்பதனைப் போல்…

இந்த தேடலில்
தொலைந்த நாட்களை எண்ணி
வீழ்ந்து விடாதே

அது வாழ்க்கையில்
உயிரோடு புதைத்துவிடும் உன்னை…

மறவாமல் நினைவு கொள்
“நேற்றைய தொல்விகளிலும்
நாளைய கனவினிலும்
இன்றைய வாழ்க்கையை
தொலைத்து விடாதே”

No comments:

Post a Comment