Friday, 27 June 2014

எங்கே நம் சுதந்திரம்

எங்கே நம் சுதந்திரம்....?

பிறக்கும் முன்பே
பள்ளியில் விண்ணப்பம்
தவழும் தருவாயில்
கட்டாயக் கல்வி
நடக்கும் போதே நாட்டு நடப்பு
ஓடும் வயதில்
மதிப்பெண்களுடன் ஓட்டப் பந்தயம்……
எங்கே நம் சுதந்திரம்?

வாலிபம் வெறும் வணிகமயமாய்
காலையில் இரை தேடி
மாலையில் கூரை தேடும்
கூடுவிட்டு கூடு பாயும் பறவைகள்……..
சிட்டுக் குருவியின்
சுதந்திரம் உண்டா நமக்கு?

வேலையில் உன் கடமை
வாங்கிய கடனுக்காகவோ
தவறினால்
தாமதித்தால்
தட்டிக் கேட்க முடியுமா?
இல்லையே…..
தன்மானத்திடம் தலைக் குனிவு
இதுவோ சுதந்திரம்!

நாம் வாழும் பூமியருகில்
மனித பிண்டங்களாய்
ஓர் இனமே அழிகையில்
எந்திர பந்தங்களுடன்
உறவாடுகிறோம்
வாய் இருந்தும் ஊமையாய்
இல்லை…இல்லை…….
உயிரிருந்தும் மௌனியாய்????????
இதுவா சுதந்திரம்?

இறைவா மாற்றிவிடு
அனைவரையும்
காடுகளில் வாழும்
ஆதாமும் ஏவாளுமாக
அங்கேயாவது
சுதந்திரத்தை
சுவாசித்துக் கொள்கிறோம்


கௌதம் இளங்கோ

No comments:

Post a Comment