Friday, 27 June 2014

சுதந்திரம் கெடச்சாச்சு

இருட்டாகத்தான் இருந்தது
அன்றைய இரவும்,
ஆங்காங்கே சில மூணு முணுப்புகள் "உண்மையாகவே கிடைத்து விட்டதா?
ஆம்,
சிலர் சொல்லி அனுப்பியதாக சொல்லின சில கதர் சட்டைகள்.
நம்பிக்கை இன்றி காத்துக்கிடந்தோம்.
இரவின் மைய இருள் நகர்ந்த பின் ஆதிகாரப் பூர்வ தகவல் வந்தது சிலர் மூலம்,
சொல்லில் அடங்கா மகிழ்வுடன் குதுகளித்தோம்

"சுதந்திரம் கிடைத்து விட்டது என்று"

இதை ஆண்டுக்கு இரு முறை சொல்லி இனிப்பு தரும் தாத்தா.
இப்போதெல்லாம் இதை தாத்தா சொல்வதே இல்லை
.தான் தியாகி என்பதை நிரூபிக்க கூட 500 செலவானதில் இருந்து........


என் பிரிய தோழமைகளே..! ஆகஸ்டு 15 சுதந்திர தின வாழ்த்துக்கள் அனைவருக்கும்
வாழ்க பாரதம்!
வந்தேமாதரம்.
ஊழல் ஒழிய இன்றாவது சூளுரைப்போம்
ஊழலில்லா இந்தியா அமைய பாடுபடுவோம்

No comments:

Post a Comment