Friday, 27 June 2014

தந்தையர் தினம்

தந்தையே உன் வயிற்றில் சுமக்காவிட்டாலும் காலமெல்லாம் சுமந்தாய் உன் நெஞ்சினில்.. 
கருவறை மட்டும்தான் உனக்கில்லை தாயென்று சொல்ல உன்னை.. 
உன்னை மறந்தாய் 
உறக்கம் தொலைத்தாய் 
உழைத்தாய்
களைத்தாய்
வேர்வையில் குளித்தாய் நாங்கள் வாழவே நலமாய்...
வலிகள் எம்மைத்தாக்கினால் வலிப்பதென்னவோ உனக்கல்லவா..
துயரங்களால் எம் விழி நனைந்தால் துடைப்பது உன் விரல்கள் அல்லவா..
சோதனையானாலும் வேதனையானாலும் தோல் கொடுக்கும் தோழன் நீயல்லவா... உன்னைப்போற்ற ஓர் நாள் மட்டும் போதுமா...
அனுதினமும் போற்றப்படவேண்டும்
உன் புகழ் பூவுலகம் வாழும் காலம் வரை

No comments:

Post a Comment