"என் தனிமை"
என் வாழ்வில் என்னால்
கையெழுத்திடப் படாத
பல பக்கங்களை
ரகசியமாய் திருடி
கைப்பற்றிக்கொண்டது
தனிமை ..
என்
ஒவ்வொரு நாளும்
ஒத்திகை பார்க்க முன்னே
ஒட்டிக்கொள்கிறது
தனிமை ..
அதே காலை
அதே மாலை
அதே உத்தியோகம்
அதே நண்பர்கள்
அத்துடன்
அதே தனிமை ..
இரவெல்லாம்
தனிமை தரும் எத்தனையோ
வினாக்களுக்கு
விடைதெரியாமலே
விடிந்து விடுகிறது ..
பகலெல்லாம்
தனிமையை எண்ணி
தவமிருந்து
பொழுதெல்லாம்
கரைந்து விடுகிறது ..
காலம் பதில் சொல்லும் என்பர்
என்
தனிமைக்கு மட்டும்
காலத்திடம்
பதில் இல்லையா என்ன ?
தனிமை
தன் கையிலிருக்கும்
தூரிகையினால்
என்னில் சில
சித்திரங்கள் வரைந்ததும்
உண்மை ..
தனிமை
உதிரும் கண்ணீரை
உலர வைத்து
வெள்ளைக்காகிதத்தில்
வர்ணம் பூசிக்கொண்டதும்
உண்மை ..
நிகழ் காலம்
தனிமையினால்
புறக்கணிக்கப்படும் போது
எதிர்காலத்திற்காய்
நான் காத்திருப்பதும்
உண்மை ..
கண்ணீரை -தண்ணீராய்
கருதி
நீச்சல் போடும்
தனிமையினால் ..
எதிர் நீச்சல் கூட
தெரியாமல் நான்
தாக்கப்படுவதும்
உண்மை ..
என்னை நானே
நொந்து கொள்ளுமளவு
தரிசிக்க முடியாத
தவிப்புகள் தந்ததும்
உண்மை ..
வலுக்கட்டாயமாக
வணக்கவைத்து
என்னை வாட்டி
வதைக்கிறதே
தனிமை ..
தினமும்
என் இதயக் கூட்டினுள்
சோக ராகத்தில்
யாழிசை மீட்டுகிறது
என் தனிமை !
கெளதம் இளங்கோ
என் வாழ்வில் என்னால்
கையெழுத்திடப் படாத
பல பக்கங்களை
ரகசியமாய் திருடி
கைப்பற்றிக்கொண்டது
தனிமை ..
என்
ஒவ்வொரு நாளும்
ஒத்திகை பார்க்க முன்னே
ஒட்டிக்கொள்கிறது
தனிமை ..
அதே காலை
அதே மாலை
அதே உத்தியோகம்
அதே நண்பர்கள்
அத்துடன்
அதே தனிமை ..
இரவெல்லாம்
தனிமை தரும் எத்தனையோ
வினாக்களுக்கு
விடைதெரியாமலே
விடிந்து விடுகிறது ..
பகலெல்லாம்
தனிமையை எண்ணி
தவமிருந்து
பொழுதெல்லாம்
கரைந்து விடுகிறது ..
காலம் பதில் சொல்லும் என்பர்
என்
தனிமைக்கு மட்டும்
காலத்திடம்
பதில் இல்லையா என்ன ?
தனிமை
தன் கையிலிருக்கும்
தூரிகையினால்
என்னில் சில
சித்திரங்கள் வரைந்ததும்
உண்மை ..
தனிமை
உதிரும் கண்ணீரை
உலர வைத்து
வெள்ளைக்காகிதத்தில்
வர்ணம் பூசிக்கொண்டதும்
உண்மை ..
நிகழ் காலம்
தனிமையினால்
புறக்கணிக்கப்படும் போது
எதிர்காலத்திற்காய்
நான் காத்திருப்பதும்
உண்மை ..
கண்ணீரை -தண்ணீராய்
கருதி
நீச்சல் போடும்
தனிமையினால் ..
எதிர் நீச்சல் கூட
தெரியாமல் நான்
தாக்கப்படுவதும்
உண்மை ..
என்னை நானே
நொந்து கொள்ளுமளவு
தரிசிக்க முடியாத
தவிப்புகள் தந்ததும்
உண்மை ..
வலுக்கட்டாயமாக
வணக்கவைத்து
என்னை வாட்டி
வதைக்கிறதே
தனிமை ..
தினமும்
என் இதயக் கூட்டினுள்
சோக ராகத்தில்
யாழிசை மீட்டுகிறது
என் தனிமை !
கெளதம் இளங்கோ
No comments:
Post a Comment