என் கண்ணில் பதிந்த
என் நட்புகளே
என் வாழ்க்கை புத்தகத்தில்
எல்லா பக்கங்களிலும் நீக்கமற
நிறைந்திருக்கும் என் உணர்வுகளே
உங்கள் அனைவருக்கும்
இந்த கவிதை சமர்ப்பணம்
"அருண் பாண்டியன்"
நடையில் நளினம் கொண்டு
சிரிப்பில் சிதறடிக்கும்
நன்மிகு தோழனே -நீ
முகத்தில் பொலிவும் ,
கண்களில் கவர்ச்சியும் கொண்டவன்.
சிகை அழகில் சிறந்து ,
பேச்சில் ஈர்ப்பு காண்பவன்.
நடையில் நளினம் கொண்டு
சிரிப்பில் சிதறடிக்கும்
நன்மிகு தோழனே -நீ
முகத்தில் பொலிவும் ,
கண்களில் கவர்ச்சியும் கொண்டவன்.
சிகை அழகில் சிறந்து ,
பேச்சில் ஈர்ப்பு காண்பவன்.
"அசோக் குமார்''
வானமென்ற
கல்லூரி நண்பர் கூட்டத்தில்
விண்மீனாய் ஜொலிக்கிறாய்.
காலம் கடந்து யோசிக்கையில்
நினைவின் முதலாய்
கனவில் உதிக்கிறாய்.
நண்பர்கள் உறவில்
வலம் வந்து தினந்தோறும் மலர்கிறாய்,
வானமென்ற
கல்லூரி நண்பர் கூட்டத்தில்
விண்மீனாய் ஜொலிக்கிறாய்.
காலம் கடந்து யோசிக்கையில்
நினைவின் முதலாய்
கனவில் உதிக்கிறாய்.
நண்பர்கள் உறவில்
வலம் வந்து தினந்தோறும் மலர்கிறாய்,
''அன்புசெல்வன்''
கனவால் சேர்க்கப்பட்டு
நினைவில் சுற்றப்படும் தோழன்.
என் உணர்வின் பங்களிப்பில்
இடம்பெறும் உயிரெழுத்து.
ஓரிரு வருடங்களில்-என்னில்
தொடங்கிய உன் நினைவுகள்
காலம் முழுதும் நிலைக்குமாட.
கனவால் சேர்க்கப்பட்டு
நினைவில் சுற்றப்படும் தோழன்.
என் உணர்வின் பங்களிப்பில்
இடம்பெறும் உயிரெழுத்து.
ஓரிரு வருடங்களில்-என்னில்
தொடங்கிய உன் நினைவுகள்
காலம் முழுதும் நிலைக்குமாட.
''சுபாஷ்''
தனக்கென ஒன்றை
உருவாக்கி கொண்டு
மற்றவர் பார்வையில் சுழல்கிறாய்.
பசும்புல் போல
வாழ்வில் தழைக்கிறாய் .
நண்பர் பகிர்வில்
உன்னதம் காண்கிறாய்.
தனக்கென ஒன்றை
உருவாக்கி கொண்டு
மற்றவர் பார்வையில் சுழல்கிறாய்.
பசும்புல் போல
வாழ்வில் தழைக்கிறாய் .
நண்பர் பகிர்வில்
உன்னதம் காண்கிறாய்.
''ராஜமகேஷ்''
தன் சொற்களினால்
அனைவர் மகிழ்விக்கும்
கருமை புன்னகை மன்னன்.
காற்றின் இதம் போல
தேகம் குளிர்விப்பவன்.
மலரின் வாசம் போல
உள்ளம் மலர்விப்பவன் .
தன் சொற்களினால்
அனைவர் மகிழ்விக்கும்
கருமை புன்னகை மன்னன்.
காற்றின் இதம் போல
தேகம் குளிர்விப்பவன்.
மலரின் வாசம் போல
உள்ளம் மலர்விப்பவன் .
''முனியப்பன்''
வானில் நானும் மிதக்கும் போது
படுக்கையாக பிடிபட்டாய்
சிறகால் சுற்றி பறந்து கொண்டு
எங்கள் உள்ளம் நெகிள்கின்றாய்.
என் சோகம் மறைக்க
உந்தன் உதட்டினில் நகைகின்றாய்
என்னில் வாசிக்கப்பட்ட
நன்பனில் ஒருவனாக திகழ்கிறாய்
வானில் நானும் மிதக்கும் போது
படுக்கையாக பிடிபட்டாய்
சிறகால் சுற்றி பறந்து கொண்டு
எங்கள் உள்ளம் நெகிள்கின்றாய்.
என் சோகம் மறைக்க
உந்தன் உதட்டினில் நகைகின்றாய்
என்னில் வாசிக்கப்பட்ட
நன்பனில் ஒருவனாக திகழ்கிறாய்
''சிவசக்தி பாண்டியன்''
நினைவென்ற கொடிகளால்
சுற்றப்பட்டு
கனவில் மலரும் பூந்தோட்டமடா நீ.
அரட்டை அடித்து
காலம் கண்ட நாட்கள் சென்று
தனிமையில் உலவும்
பிரிகை நாட்களை சந்திக்க போகிறோம்.
அன்று
பிரிவும் கனவின் நினைவாகவே தோன்றும்.
நினைவென்ற கொடிகளால்
சுற்றப்பட்டு
கனவில் மலரும் பூந்தோட்டமடா நீ.
அரட்டை அடித்து
காலம் கண்ட நாட்கள் சென்று
தனிமையில் உலவும்
பிரிகை நாட்களை சந்திக்க போகிறோம்.
அன்று
பிரிவும் கனவின் நினைவாகவே தோன்றும்.
''ஹரி ஷங்கர்''
என் கல்லூரி பயணத்தில்
காட்டப்பட்ட முதல் தமையன் .
கண்டெடுத்த முத்தை போல
கண்களால் இனங்காணப்பட்ட
ஒருவகை இனிமை தோழன்.
கற்பனை என்ற உளியால் செதுக்கப்பட்ட
வாழ்வில் அழியா நட்பின் படிவம்.
என் கல்லூரி பயணத்தில்
காட்டப்பட்ட முதல் தமையன் .
கண்டெடுத்த முத்தை போல
கண்களால் இனங்காணப்பட்ட
ஒருவகை இனிமை தோழன்.
கற்பனை என்ற உளியால் செதுக்கப்பட்ட
வாழ்வில் அழியா நட்பின் படிவம்.
''ஜேம்ஸ் செலின்''
என் உதடுகள் முதன் முறை
சகோதரி என்றழைத்த தோழி.
காற்றின் மேகம் போல ,
நட்பில் படர்ந்த உண்மை தோழி.
பேசிய நாட்கள்
கடந்து போயிருப்பினும்,
நட்பின் நாட்கள்
நீண்டு கொண்டே செல்கிறது.
என் உதடுகள் முதன் முறை
சகோதரி என்றழைத்த தோழி.
காற்றின் மேகம் போல ,
நட்பில் படர்ந்த உண்மை தோழி.
பேசிய நாட்கள்
கடந்து போயிருப்பினும்,
நட்பின் நாட்கள்
நீண்டு கொண்டே செல்கிறது.
''நந்தினி''
உங்கள் தோழியர் கூட்டம்
வானமென்ற வகுப்பில்
விண்மீனாக ஜொலிக்க கண்டிருக்கிறேன்.
மலர்களின் பூந்தோட்டத்தில்
வாசமாக வீச முகர்ந்திருக்கிறேன்.
ஆனால்
உன்னிடம் என் வார்த்தைகள்
பேசியதில்லை தோழியே.
உங்கள் தோழியர் கூட்டம்
வானமென்ற வகுப்பில்
விண்மீனாக ஜொலிக்க கண்டிருக்கிறேன்.
மலர்களின் பூந்தோட்டத்தில்
வாசமாக வீச முகர்ந்திருக்கிறேன்.
ஆனால்
உன்னிடம் என் வார்த்தைகள்
பேசியதில்லை தோழியே.
''சௌமியா''
எனக்கு பக்கபலம் கண்ட
நட்பில் பூத்த உதிரா பூ.
நட்பின் அன்பில் அரவனைக்கப்பட்ட ,
கலங்கமில்லா தோழியே....
சோகம் மறந்து விடு-ஆனால்
உண்மை நட்பை மறவாதே
எனக்கு பக்கபலம் கண்ட
நட்பில் பூத்த உதிரா பூ.
நட்பின் அன்பில் அரவனைக்கப்பட்ட ,
கலங்கமில்லா தோழியே....
சோகம் மறந்து விடு-ஆனால்
உண்மை நட்பை மறவாதே
''பிரியா''
உணர்வுகள் பகிர்ந்த
என் ஒருவகை தோழி
பிரியம் கொண்ட பெயரில்
பொறுமை கொள்ளும் தோழி .
உண்மையில்
நட்பை மதிக்கும் இதயம்
ஒருபோதும் மறவாது
நாம் கண்ட நினைவுகளை.
அதனை இழந்து விடாதே.
உணர்வுகள் பகிர்ந்த
என் ஒருவகை தோழி
பிரியம் கொண்ட பெயரில்
பொறுமை கொள்ளும் தோழி .
உண்மையில்
நட்பை மதிக்கும் இதயம்
ஒருபோதும் மறவாது
நாம் கண்ட நினைவுகளை.
அதனை இழந்து விடாதே.
''சாரதப்ரியா''
கள்ளமில்லா மனம் கொண்ட,
நட்பு வட்டாரத்தின் பெரிய தோழி
உறவுகளின் மதிப்பின்
தன்னை உயர்த்திய தோழி.
சுவாசம்,
உயிராக இருப்பது போல ,
நட்பும்
என்றும் நம் நினைவாகவே இருக்கும்.
கள்ளமில்லா மனம் கொண்ட,
நட்பு வட்டாரத்தின் பெரிய தோழி
உறவுகளின் மதிப்பின்
தன்னை உயர்த்திய தோழி.
சுவாசம்,
உயிராக இருப்பது போல ,
நட்பும்
என்றும் நம் நினைவாகவே இருக்கும்.
''விஜயலட்சுமி''
எங்கள் நண்பர்கள் இடையே,
மெதுவாக அறிமுகமாகிய தோழி.
ஆனால்,
நட்பின் வழியில் முதன்மை தோழி.
நட்பாக சுற்றி கொண்டு
வாழ்நாள் முழுதும் வாழும்
நட்பின் ஓவியம் .
எங்கள் நண்பர்கள் இடையே,
மெதுவாக அறிமுகமாகிய தோழி.
ஆனால்,
நட்பின் வழியில் முதன்மை தோழி.
நட்பாக சுற்றி கொண்டு
வாழ்நாள் முழுதும் வாழும்
நட்பின் ஓவியம் .
''வைஷ்ணவி''
ஒரே பகுதி நந்தவனத்தில்
நான் இருவர் வசித்தும்
முதலில் இனம் கண்டு கொள்ளவில்லை .
பின்பு
உன் நட்புகிடைக்க பெற்றேன்.
திங்கள்போல
நம் நட்பு பிரகாசிக்க
ஆவல் காண்கிறேன் என்றும்.
ஒரே பகுதி நந்தவனத்தில்
நான் இருவர் வசித்தும்
முதலில் இனம் கண்டு கொள்ளவில்லை .
பின்பு
உன் நட்புகிடைக்க பெற்றேன்.
திங்கள்போல
நம் நட்பு பிரகாசிக்க
ஆவல் காண்கிறேன் என்றும்.
''அருண் ரவி''
தோற்றுவிக்கப்பட்ட உறவுகள்
ஒரு போதும்
நிலை கொள்வதில்லை.
இயற்கை அளித்த
நட்பு மட்டுமே
காலம் முழுதும் பூக்கிறது.
உறவுகளுக்கு மதிப்பளிக்காதே ,
உணர்வுகளுக்கு மதிப்பு கொடு ....
தோற்றுவிக்கப்பட்ட உறவுகள்
ஒரு போதும்
நிலை கொள்வதில்லை.
இயற்கை அளித்த
நட்பு மட்டுமே
காலம் முழுதும் பூக்கிறது.
உறவுகளுக்கு மதிப்பளிக்காதே ,
உணர்வுகளுக்கு மதிப்பு கொடு ....
''பாண்டியராஜன்''
வானம் தனக்கென்று
எதையும் நிலை கொண்டிருப்பதில்லை
அது போலவே
உன் நட்பும்.
எதையும் எதிர்பாரத நட்பு
சொர்க்கம் கண்ட மனம் போல.
மனதில் கொள்வதே நட்பு.
நடைமுறை எதிர்பார்ப்பதல்ல என்றும்.
வானம் தனக்கென்று
எதையும் நிலை கொண்டிருப்பதில்லை
அது போலவே
உன் நட்பும்.
எதையும் எதிர்பாரத நட்பு
சொர்க்கம் கண்ட மனம் போல.
மனதில் கொள்வதே நட்பு.
நடைமுறை எதிர்பார்ப்பதல்ல என்றும்.
"தினேஷ்"
அயல்நாட்டின் அன்பு நண்பன்
உறவுகளை பிரிந்து உயிரற்று
வசிக்கிறோம் நண்பா,
பேசி கொள்ளவும்
பகிர்ந்து மகிழவும்
கடவுள் நமக்களித்த உறவு நட்பு மட்டுமே.
அயல்நாட்டின் அன்பு நண்பன்
உறவுகளை பிரிந்து உயிரற்று
வசிக்கிறோம் நண்பா,
பேசி கொள்ளவும்
பகிர்ந்து மகிழவும்
கடவுள் நமக்களித்த உறவு நட்பு மட்டுமே.
''கஸ்தூரி அசோக்''
என்நட்பின் சுவடுகள் கூட
உன்னில் உள்ளதா
என்பதை இதுவரை கண்டதில்லை.
ஆனால்
என் நண்பனுக்காக
நட்பென்ற பூவாகவே
என்றும் மலர்வாய் நீ.
என்நட்பின் சுவடுகள் கூட
உன்னில் உள்ளதா
என்பதை இதுவரை கண்டதில்லை.
ஆனால்
என் நண்பனுக்காக
நட்பென்ற பூவாகவே
என்றும் மலர்வாய் நீ.
''ரஞ்சனி கேசவன்''
மேகம் யாரையும் எதிர்ப்பார்த்து
மழையை பெய்விப்பதில்லை .
அது போலவே
உன் நட்பும்.
காற்றில் அறியா இதம் போல
மலரில் வீசும் மணம் போல
உன் நட்பை உணர்ந்திருக்கிறேன்.
மேகம் யாரையும் எதிர்ப்பார்த்து
மழையை பெய்விப்பதில்லை .
அது போலவே
உன் நட்பும்.
காற்றில் அறியா இதம் போல
மலரில் வீசும் மணம் போல
உன் நட்பை உணர்ந்திருக்கிறேன்.
''கிஷோர்''
எங்கள் நட்பு சங்கிலியின்
முதல் வரி பயணம் -என்றும்
தன்னந்தனிமையில் உலவாடும்
எங்கள் அன்பின் தலைவன்.
மேகம் போல் மனம் இருந்தாலும்
வெளிக்காட்ட தெரியாது
போராடும் ஒரு வெண்புறா
எங்கள் நட்பு சங்கிலியின்
முதல் வரி பயணம் -என்றும்
தன்னந்தனிமையில் உலவாடும்
எங்கள் அன்பின் தலைவன்.
மேகம் போல் மனம் இருந்தாலும்
வெளிக்காட்ட தெரியாது
போராடும் ஒரு வெண்புறா
''பார்த்தசாரதி''
என்னில் இடம்பிடித்த
கவின் மிகு
உதவி தோழன்.
பாசமென்ற கற்களால்
இதயத்தினுள் கட்டப்பட்டவன்.
மேகமென்ற துகள்களால்
எங்களை நீராக நனைப்பவன்.
என்னில் இடம்பிடித்த
கவின் மிகு
உதவி தோழன்.
பாசமென்ற கற்களால்
இதயத்தினுள் கட்டப்பட்டவன்.
மேகமென்ற துகள்களால்
எங்களை நீராக நனைப்பவன்.
''அகிலா''
இதுவரை
உன் நேர் கண்டதில்லை.
ஆனால்
உன்னை பற்றி வரிகள்
எழுதுகிறேன் என்று நினைக்காதே .
நட்பிற்கு வார்த்தைகள் முக்கியமல்ல.
பேசி கொண்ட உணர்வுகள் மட்டுமே.
இதுவரை
உன் நேர் கண்டதில்லை.
ஆனால்
உன்னை பற்றி வரிகள்
எழுதுகிறேன் என்று நினைக்காதே .
நட்பிற்கு வார்த்தைகள் முக்கியமல்ல.
பேசி கொண்ட உணர்வுகள் மட்டுமே.
''கவியரசன்''
நிலவும் நட்பும் ஒன்று தான்.
கரும்புள்ளிகள் இருந்தாலும்
என்றும் அழகு தான்.
விண்ணில் பிடிபட்ட
விண்மீன் போல
இசையில் சேர்க்கப்பட்ட
சுவரங்கள் போல
என்றும் நாம் பின்னபட்டிருகிறோம்.
நிலவும் நட்பும் ஒன்று தான்.
கரும்புள்ளிகள் இருந்தாலும்
என்றும் அழகு தான்.
விண்ணில் பிடிபட்ட
விண்மீன் போல
இசையில் சேர்க்கப்பட்ட
சுவரங்கள் போல
என்றும் நாம் பின்னபட்டிருகிறோம்.
நட்புக்கள் நன்றிகள் தேவையில்லை
இருந்தாலும் சொல்லுகிறேன்
நன்றி
கெளதம் இளங்கோ
இருந்தாலும் சொல்லுகிறேன்
நன்றி
கெளதம் இளங்கோ
No comments:
Post a Comment