Friday, 27 June 2014

என்னை பெற்றவளே

கருவில் சுமந்து உயிராய் காத்து, உயிர் தந்தவளே.,
தொப்புள் கொடி பிரிந்ததால் என்னவோ, நம் பாச கொடி இணைந்தது.,
நிலா சோறு ஊட்டி, தாலாட்டு தந்தவள் நீ தானே.,
அகரம் தந்து, அன்பு காட்டியவளும் நீ தானே.,
என் தவறுகளை கண்டித்தவளும் நீ தான், தண்டித்தவளும்... நீ தான்., 

அறியாமையால் செய்த தவறுகளை மன்னித்துவிடு,
மனதார எதுவும் செய்யவில்லை.,
தாயிற் சிறந்த கோயிலும் இல்லை என்பார்கள்
என்னை பொருத்தவரை உன்னை விட சிறந்த தெய்வம் இல்லை!!!
" அம்மா "

நீ எனக்காக உழைத்து போதும் ஓய்வு எடு தாயே உய்யாரமாக
உன்னக்க உழைக்க நான் இருக்கிறேன்.
அன்னையே மீண்டும் உந்தன் மகனாக பிறக்க இறைவனை வேண்டுகிறேன்!!!
அன்னையர் தின வாழ்த்துக்களுடன் உன்னை வணங்குகிறேன்.

என்றும் உன் கைப்பிடித்த குழந்தையாய்
கௌதம் இளங்கோ...!

No comments:

Post a Comment