இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
அப்பா
நில்லாது பொழியும் அன்பிலாகட்டும்
செல்லாது நிலைத்த பண்பிலாகட்டும்
நிரந்தரமானவர் நீர்
அகரம் சொல்லித் தந்த போதும்
சிகரம் ஏறி நின்ற போதும்
மாறாதவர் நீர்
வம்புக்கும் அன்புதான் மருந்து
அதுவே உறவினில் விருந்து
எனும் அறிவு தந்தவர் நீர்
ஓடி விளையாடவும், ஓய்ந்திருக்கலாகாது எனவும்
பாரதி சொன்னபோதும் கேட்டதில்லை நான்
கண்டதுண்டு உங்களிடம், கண்டதை இன்றும்
கடைபிடிக்க நீங்களே காரணம்
இதிகாசமும், புராணமும் கற்றுத் தந்தீர்
இருளிலும் இயல்பாக இருக்க கற்றுத் தந்தீர்
துன்ப மேகம் சூழும் போதும் அதில் வீழாது இருக்க கற்றுத் தந்தீர்
இன்ப வெள்ளம் ஆழும் போதும் அதிலே சாயாது இருக்க கற்றுத் தந்தீர்
கண்டதும், கேட்டதும், குறைவில்லாது கற்றுத் தந்தீர்
வாழும் முறைகள், நிறைவாகவே கற்றுத் தந்தீர்
இன்னமும் உங்களிடம் கற்க உண்டு ஏராளம்
கற்கையில் நீங்கள் தரும் விவரம் தாராளம்
உங்கள் மகன் என மனதாரச் சொல்வதில்
எனக்குண்டு மகிழ்ச்சியும், சிறு கர்வமும்
எப்போதும் அப்பா...
இன்று நான் பெற்றுவிட்ட அனைத்திலும் உங்கள் உழைப்பு உள்ளது
என் வெற்றிகளுக்கு பின்னல் நீங்கள் இருக்கிறீர்கள்
தோல்விகளுக்கு பின்னால் சாய்ந்து கொள்ள உங்கள் தோள் இருக்கிறது
நன்றி நன்றி நீங்கள் நீங்களாகவே இருப்பதற்காக...
இப்போதும், எப்போதும் நான் உங்களுக்கே மகனாக வேண்டும்
என்றும் உங்கள் அன்பு ஒன்றையே வேண்டும் உங்கள் பிரிய மகன்
கெளதம் இளங்கோ
அப்பா
நில்லாது பொழியும் அன்பிலாகட்டும்
செல்லாது நிலைத்த பண்பிலாகட்டும்
நிரந்தரமானவர் நீர்
அகரம் சொல்லித் தந்த போதும்
சிகரம் ஏறி நின்ற போதும்
மாறாதவர் நீர்
வம்புக்கும் அன்புதான் மருந்து
அதுவே உறவினில் விருந்து
எனும் அறிவு தந்தவர் நீர்
ஓடி விளையாடவும், ஓய்ந்திருக்கலாகாது எனவும்
பாரதி சொன்னபோதும் கேட்டதில்லை நான்
கண்டதுண்டு உங்களிடம், கண்டதை இன்றும்
கடைபிடிக்க நீங்களே காரணம்
இதிகாசமும், புராணமும் கற்றுத் தந்தீர்
இருளிலும் இயல்பாக இருக்க கற்றுத் தந்தீர்
துன்ப மேகம் சூழும் போதும் அதில் வீழாது இருக்க கற்றுத் தந்தீர்
இன்ப வெள்ளம் ஆழும் போதும் அதிலே சாயாது இருக்க கற்றுத் தந்தீர்
கண்டதும், கேட்டதும், குறைவில்லாது கற்றுத் தந்தீர்
வாழும் முறைகள், நிறைவாகவே கற்றுத் தந்தீர்
இன்னமும் உங்களிடம் கற்க உண்டு ஏராளம்
கற்கையில் நீங்கள் தரும் விவரம் தாராளம்
உங்கள் மகன் என மனதாரச் சொல்வதில்
எனக்குண்டு மகிழ்ச்சியும், சிறு கர்வமும்
எப்போதும் அப்பா...
இன்று நான் பெற்றுவிட்ட அனைத்திலும் உங்கள் உழைப்பு உள்ளது
என் வெற்றிகளுக்கு பின்னல் நீங்கள் இருக்கிறீர்கள்
தோல்விகளுக்கு பின்னால் சாய்ந்து கொள்ள உங்கள் தோள் இருக்கிறது
நன்றி நன்றி நீங்கள் நீங்களாகவே இருப்பதற்காக...
இப்போதும், எப்போதும் நான் உங்களுக்கே மகனாக வேண்டும்
என்றும் உங்கள் அன்பு ஒன்றையே வேண்டும் உங்கள் பிரிய மகன்
கெளதம் இளங்கோ
No comments:
Post a Comment