Friday, 27 June 2014

பெற்றுவிட்டோம் சுதந்திரம்

கண்ணீர் விட்டு வளர்த்த செடி,
தழைத்து வளர்ந்து மரமானது,
பலரின் உயிர் தியாகமானது,
காந்தியின் அஹிம்சை பலனானது,
சுதந்திரத்தை அடைந்துவிட்டோம் ,
அடிமைத்தளையிலிருந்து விடுபட்டோம்,
இப்போது இருப்பது சுதந்திரமா?

இது பெயர்தான் சுதந்திரமா?

சுதந்திரத்தின் தப்பான உபயோகமா?
அளவுக்கு மிஞ்சின சுதந்திரமா?
தன்னடக்கம் சுதந்திரம்
நாட்டுத்தொண்டு சுதந்திரம்,
தேசப்பற்று சுதந்திரம்
ஏமாற்றாத பிழைப்பு சுதந்திரம்
நாட்டில் இவைகள் எங்கே போயின?
உண்மையான அன்பு எங்கே மறைந்தன?
பழைய கண்ணியம் எங்கே?
அந்தக் கட்டுப்பாடு எங்கே?

வயதான கிழவர்,
கால் தேய நடக்கிறார்.
பென்சன் தொகைக்காக
அவர் காகிதம் வைத்த இடத்தில்,
மேலே நகர லஞ்சப்பணம் இல்லை,

சீட்டுக்கம்பெனியில் ஏமாற்றம்,
ஏழைகள் வயிற்றில் பெரிய அடி

நல்ல மதிப்பு பெற்ற இளைஞனுக்கு
லஞ்சம் கொடுக்க பண்மில்லை,
கல்லூரியில் இடமில்லை,

நாற்பது மார்க் எடுத்தவன் ,
டாக்டர் பட்டம் பெறுகிரான்

சுதந்திரத்தியாகிகள் குடிசையிலே,
கிடைத்த பதக்கத்தின் திருப்தியிலே,

சுதந்திரப்போரின் நினவினால்
வயிற்றின் பசியை நினைப்பதில்லை

மேல் நாட்டு மோகம் நாட்டினிலே,
உடைக் குறைவு முன்னேற்றம் பெண்களிலே,

சுயநலத்திற்குத் தலைவர்கள்,
பொது நலத்தை மறந்தார்கள்,

கீழ்படியிலிருந்து மேல்வரை
ஊழல் லஞ்சம் பரவி இருக்க,
தைரியம் இல்லை தட்டிக் கேட்க,

பெற்றோர்கள் முதியோர் இல்லத்திலே.
அவர்களின் மக்கள் மேலை நாட்டினிலே
சுதந்திரம் இதுவா பாரினிலே

எல்லாம் போலி தேசத்தினிலே,
மனம் வெம்பிப் போகிறேன்,
தன்னலமற்றத் தியாகிகளைத் தேடுகிறேன்,

சுதந்திரத்தின் உண்மைப் பொருளை,

இனி யார்தான் புரிய வைப்பாரோ....?
என்ற தேடலுடன்
கெளதம் இளங்கோ

No comments:

Post a Comment