Friday, 27 June 2014

ஆசிரியர் தினம்

ஆசிரியர் தின வாழ்த்துக்கள்..

மடி யமர்த்தி கை பிடித்து
எழுத்தறிவித்த
என் முதல் ஆசிரியை “S.R ராணி,கோமதி”

மதிப்பு மிக்க கணக்கறிவைக்
சூட்சமமாய்க் கற்பித்த
பெருந்தகையாய்
“கலைதாஸ்,முருகன்” ஆசிரியர்

பொறுப்புடனே
என் குறும்பையெல்லம்
பொறுத்தாண்டு
அன்புடனே அரவனைத்த
“அமல்ராஜ்.பிரான்சிஸ்"


என் அன்னைக்கும் ஆசானாய்
எனக்கும் வழிகாட்டிய
"அய்யாச்சாமி,மணி"

என்று
எத்தனையோ ஆசிரியர்கள்...
என்வாழ்வில் விளக்கேற்ற
உழைத்ததெல்லாம் நினைவாக…

கணக்கில்லாக் குருமார்கள்…
மகாக்கவி பாரதி முதல்
அன்பையேத் தெய்வமாக்கி
அரூபத்தை என்னுள் நிரூபித்த
இன்னைறய ஏனைய கவிஞர்கள் வரை
அருள் மழையால் அணைத்தவர்கள்
அனைவரையும் வணங்குகின்றேன்...
வாழ்க வளமுடன்…!

அனைவருக்கும் என் இதயங்கனிந்த ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.!

கௌதம் இளங்கோ

No comments:

Post a Comment