Friday, 27 June 2014

சிறுவயது கனாக்காலம்

கனவுகளையும் கைப்பிடித்து
தும்பியின் வால் பிடித்து
பட்டாம் பூச்சிகளாய்
சுற்றித்திரிந்த காலம்…

காலம் கடந்தாலும்
இன்றும் என் நினைவில்
வந்து போகிறது
வசந்தமென வாழ்ந்த
சிறுவயது நியாபகங்கள்…

திருட்டு மாங்காய்
ருசித்தது முதல்
நுங்கில் வண்டி செய்து
ஓட்டியது வரை

அப்பப்ப எத்தனை
எத்தனை லீலைகள்…

எங்களை கண்டு
வெயிலும் பயந்த காலங்கலுண்டு

இன்று நினைக்க
வந்து தான் போகிறது
அனைத்து நிகழ்வுகளும்
நிகழ்வுகளாகவே

மீண்டும் பிறக்காத
கனவுகளாகவே…!!

No comments:

Post a Comment