Friday, 27 June 2014

கேள்வி..??


"நாமார்க்குங் குடியல்லோம் நமனை யஞ்சோம்"
என்றும்
"நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே"
என்றும்
அரசனை குறித்தும் ஆண்டவனை குறித்தும் 
நாம் கேட்ட கேள்விகள் எங்கே...???

இப்போது உள்ள நிலைமையை பொறுத்த வரை
கொடியவர்களின் கொடுஞ்செயலால் ஒரு சமூகம் அழிவதில்லை
ஆனால்
நல்லவர்களின் மௌனத்தால் அது அழிகிறது...
இது என்ன அவலம் ...??

இதையே தான் திருவள்ளுவர்
"செவியுணவிற் கேள்வி யுடையார் அவியுணவின்
ஆன்றாரோ டொப்பர் நிலத்து"
(குறைந்த உணவருந்தி நிறைந்த அறிவுடன் விளங்கும் ஆன்றோர்க்கு ஒப்பாக இருப்பது கேள்வி ஞானம் மட்டுமே )

பள்ளியிலிருந்தே பதில் சொல்லி வளர்க்கப்படும்
குழந்தைக்கு கேள்வி கேக்கும் பழக்கம் எப்படி வரும் ..????
அப்படி கேட்டால் அவனுடைய பதில் இப்படி தான் இருக்கும்
இராமன் ஆண்டால் என்ன ..??
இராவணன் ஆண்டால் என்ன ..??

நமது நாட்டில் தான்
பால் விலை ஏறுகிறது
எரிபொருள் விலை ஏறுகிறது
வெங்காய விலை ஏறுகிறது
பொன் விலை ஏறுகிறது
ஆனால் நாம் கேக்கும் கேள்விகள் மட்டும்
அரசாங்கத்தின் காதுகளுக்கு ஏறவேயில்லை

நிறைந்த பொருளில் கரைந்து கிடப்பவனுக்கு
ஏழைகளின் ஓலம் எப்படி கேட்கும்..?

இருந்தும் கேட்பது நம் கடமையல்லவோ........!!!!!

கெளதம் இளங்கோ

No comments:

Post a Comment