Wednesday, 30 July 2014

துரோகத்திற்கு நன்றி..............!

இனிமையான பொழுதொன்றில்....
திரும்பிப் பார்க்கும் போது,
ஏறிவந்த படிக்கட்டுகளாய் துரோகங்கள்,
எங்கோ தொலைவில்... 
கறுப்பு வெள்ளையாய்!
வலிகளை வழிகளாக்கி...
துரோகங்களை அனுபவங்களாக்கி...
வாழ்க்கையினை வண்ணங்களாக்க உதவிய...
துரோகங்களுக்கும்...
அதைப் பரிசாகத் தந்தவர்களுக்கும்,
ஒரு நன்றி சொல்லியே ஆகவேண்டும்!!!

No comments:

Post a Comment