நாளைய மகிழ்விற்காய் நடப்பைக் கொல்லும் - சாமானியர்
நடுவே
நடுவே
இருப்பதைக் கொண்டு மற்றோர் மனம் வென்ற என் தாத்தா
சிங்கராசு
சிங்கராசு
பெயருக்கேற்றாற்போல் அப்படி ஒரு கம்பீரம்
நடையிலும் பேச்சிலும்
எதிரே வருகிற அனைவரும் கை கூப்பி வணங்கும்
போது தெரிகிறது – உன்
அருமையும் பெருமையும்
இன்றும் நினைவில் உங்களோடு இணைந்த
என் மழலைக்காலம்.....!!
அவிழும் காற்சட்டையை
இடது கையால் பிடித்துக் கொண்டு ...
வலது கையால் ...
தாத்தாவின் சுண்டு விரலை
பற்றிக் கொண்டு நடக்கையில்
திருவிழாவில் தங்கத்தேரை
நான் இழுத்து செல்வது போல் இருக்குமாம்
கைபிடித்து கடைத்தெருவிற்கு கூட்டிச்சென்று
வழியில் கேட்டதெல்லாம் வாங்கி தந்து
நான் மகிழ தான் மலர்வார்
காக்காதோப்பு திருவிழாவில்
வழியில் கேட்டதெல்லாம் வாங்கி தந்து
நான் மகிழ தான் மலர்வார்
காக்காதோப்பு திருவிழாவில்
எனை தங்கள் தோள்மீது ஏற்றி வைத்து
தெய்வதரிசனம் காண்பித்தீர்கள்
நானும் பார்த்தேன் – எங்களின்
தெய்வம் நீங்கலென்பதை மறந்து
எதற்கும் கலங்கா உங்கள் உள்ளம்
கலங்க கண்டேன்
சித்தப்பா இறந்த போது ...
எனை மடியிலமர்த்தி
துண்டால் முகம் பொத்தி
கோ ..வென அழுத காட்சி
இன்னும் என் மனக் கண்ணில் ...!
சித்தியின் வாழ்க்கை என்னாகும் என்ற
சித்தப்பா இறந்த போது ...
எனை மடியிலமர்த்தி
துண்டால் முகம் பொத்தி
கோ ..வென அழுத காட்சி
இன்னும் என் மனக் கண்ணில் ...!
சித்தியின் வாழ்க்கை என்னாகும் என்ற
பயத்தின் வெளிப்பாடுதான்
அந்த அழுகையென
எனக்குப் புரிந்தது ...!
அந்த அழுகையென
எனக்குப் புரிந்தது ...!
நான் பிறந்ததிலிருந்து இன்று வரை
என் தீபாவளியும் பொங்கலும் தாத்தா
நீங்கள் எடுத்து கொடுத்த புத்தாடையில் தான்
நாங்கள் சந்தோசமாய் இருக்க – நீங்கள்
சம்பாரித்தது போக இன்று
நாங்கள் சம்பாரிக்கும் போது
நீங்கள் இல்லையே தாத்தா
ஏன் உங்கள் பேரன் படும் கஷ்டத்தை
காண கூடாது என்பதாலா....??
அரசுப்பேருந்தில் நீங்கள் செல்லும் போது
அனைவரும் உன்னை வணங்க - என் தாத்தா
என சொல்லும் போது எவ்வளவு பெருமையாக இருக்கும் தெரியுமா.
எங்கு சென்றாலும் கை பிடித்து
எங்கு சென்றாலும் கை பிடித்து
அழைத்து சென்றீர்கள்
இப்பொது மட்டும் ஏன்...!!
நீங்கள் இல்லை என்பதை இப்போதும்
நம்ப மறுக்கிறது எங்களின் மனது
நீங்கள் இறந்த செய்தி
கேட்டு
நான் மனம் கலங்கி மதி மயங்கி
நிற்கையிலே
என் சுண்டு விரலை
யாரோ பற்றுவது போல
யாரோ பற்றுவது போல
ஒரு உணர்வு
திரும்பி பார்த்தால் சிரித்தபடி
என் தாத்தா
அரூபமாக ...
நான் இருக்கேன் டா
நான் இருக்கேன் டா
என்பது போல ...!
ஜென்மங்கள் உண்டெனில்
ஓர் வரம் வேண்டுவேன்
வளர்ந்த குழந்தையுன்னை
என் குழந்தையாய் வளர்க்க
உலகில் ஏதேனும் ஈடாகுமா
சவரம் செய்யபடாத
நிறமிழந்த முகமுடியுடன்
என் தாத்தா தரும்
ஒற்றை முத்தத்திற்கு
என் குழந்தையாய் வளர்க்க
உலகில் ஏதேனும் ஈடாகுமா
சவரம் செய்யபடாத
நிறமிழந்த முகமுடியுடன்
என் தாத்தா தரும்
ஒற்றை முத்தத்திற்கு
கெளதம் இளங்கோ
No comments:
Post a Comment