Wednesday, 30 July 2014

பிழைக்க தெரிந்தவர்கள்...!!

பிழைக்க தெரிந்தவர்கள்...!!

வாய்ப்புக்காக
காத்திருக்கும் காலங்களில்
காலை வாறிவிட்டு
கரை சேரத் துடிக்கும்
நண்டுக் கூட்டங்கள் அவர்கள்...!!

நன்றாக
உற்று நோக்கினால்
நயவஞ்சக நோய் தாக்கிய
சல்லடை இதயம்
கொண்டவர்கள் அவர்கள்...!

எட்டிப் பார்க்கும்
நேரத்தில் ,
எட்டி மிதித்து
தட்டிப் பறிக்கும்
எட்டப்பனை மிஞ்சிய
எம தூதுவர்கள் அவர்கள்..!!

எறும்பு செல்லும்
பாதையிலும்
குழி தோண்ட நினைக்கும்
குள்ள நரியின்
குடும்ப உறுப்பினர்கள்
அவர்கள் ...!!

உருவான திறமைகளை
உறிஞ்சி எடுத்து
உயிர் வளர்க்கும்
உடல் திரண்ட
நஞ்சுப் பூச்சிகள் அவர்கள்..!!

அந்த அவர்கள் தான்
அடுத்தவன் தலையில்
மிளகாய் அரைத்து
உழைப்பைத் திருடி,
தொழில் நடத்தும்
பிழைக்க தெரிந்தவர்கள்...!!

கெளதம் இளங்கோ

No comments:

Post a Comment