Wednesday, 30 July 2014

துரோகத்திற்கு நன்றி..............!

இனிமையான பொழுதொன்றில்....
திரும்பிப் பார்க்கும் போது,
ஏறிவந்த படிக்கட்டுகளாய் துரோகங்கள்,
எங்கோ தொலைவில்... 
கறுப்பு வெள்ளையாய்!
வலிகளை வழிகளாக்கி...
துரோகங்களை அனுபவங்களாக்கி...
வாழ்க்கையினை வண்ணங்களாக்க உதவிய...
துரோகங்களுக்கும்...
அதைப் பரிசாகத் தந்தவர்களுக்கும்,
ஒரு நன்றி சொல்லியே ஆகவேண்டும்!!!

பிழைக்க தெரிந்தவர்கள்...!!

பிழைக்க தெரிந்தவர்கள்...!!

வாய்ப்புக்காக
காத்திருக்கும் காலங்களில்
காலை வாறிவிட்டு
கரை சேரத் துடிக்கும்
நண்டுக் கூட்டங்கள் அவர்கள்...!!

நன்றாக
உற்று நோக்கினால்
நயவஞ்சக நோய் தாக்கிய
சல்லடை இதயம்
கொண்டவர்கள் அவர்கள்...!

எட்டிப் பார்க்கும்
நேரத்தில் ,
எட்டி மிதித்து
தட்டிப் பறிக்கும்
எட்டப்பனை மிஞ்சிய
எம தூதுவர்கள் அவர்கள்..!!

எறும்பு செல்லும்
பாதையிலும்
குழி தோண்ட நினைக்கும்
குள்ள நரியின்
குடும்ப உறுப்பினர்கள்
அவர்கள் ...!!

உருவான திறமைகளை
உறிஞ்சி எடுத்து
உயிர் வளர்க்கும்
உடல் திரண்ட
நஞ்சுப் பூச்சிகள் அவர்கள்..!!

அந்த அவர்கள் தான்
அடுத்தவன் தலையில்
மிளகாய் அரைத்து
உழைப்பைத் திருடி,
தொழில் நடத்தும்
பிழைக்க தெரிந்தவர்கள்...!!

கெளதம் இளங்கோ

மெய் எழுத்துக்கள்...!!

எனன பாவம செயததோ
இநத எழததுககள
திருமணம ஆகாமலே
இபபடி மெயயினறி
விதவைகளாகி நிறகினறன..!!

தமிழ மொழி கொணட
பெருமை சொலலவே,
மெயயிலலாமல
பொயயாக நிறகினறன
இநத எழுததுககள...!!

எநத மொழியும
எதிர காணாத பெருமை
எஙகள தாய தமிழுககு உணடு,
இது வெறும பேசசு மொழியலல,
உயிரின மூசசு மொழி...!!

உலகின மிக சிறநத
பேரழகி எஙகள தமிழ மொழி,
உசசரிககும போதே
நாவில எசசில ஊறும
தேனினும இனிய மொழி..!!

எழுதது பிழை இருநதாலும,
அழகில குறை சூழநதாலும
தனிததுவம வாயநது
தடம பதிபபது
எஙகள ஆதிகால தமிழ...!!

இஙகே தமிழ மொழியின
விநதை எனபது
மெயயெழுததிலலாமல
உயிரமெயயெழுததை
வாசிகக முடியும எனபதே...!!

ஒரு தமிழனால இதை
நிசசயமாக சரியாக
படிகக முடியும
எனற கரவததினால தான
தமிழ மொழி பெருமையை
உரககச சொலகிறேன..!!

Friday, 4 July 2014

என் தந்தை....

என் தந்தை....

1.எனக்கு ஐந்து வயது இருக்கும் போது,
அடிக்கடி தூக்கத்தில் அழுவேன்,
சினுங்குவேன்.தன் தூக்கம் களைந்து என் அருகில் அமர்ந்து தட்டிக் கொடுத்தார்.

2.பத்து வயது இருக்கும் போது தனக்கு பிடித்த ஏதேனும் ஒன்றை விட்டுக் கொடுத்து அவர் செலவைக் குறைத்துக் கொண்டு எனக்கு பள்ளிக் கட்டணம் செலுத்தினார்.

3.பதினெட்டு வயது இருக்கும் போது, இதுவரை உழைத்து சேமித்த எல்லாவற்றையும் என் பட்டப் படிப்பிற்காக இழந்தார்.

4.இருபத்திரண்டு வயது இருக்கும் போது , தன் மரியாதையை விட்டுக் கொடுத்து என் வேலைக்காக சிபாரிசு கேட்டு பலர் வீட்டுக் கதவுகளைத் தட்டினார்.

5.எல்லா தீபாவளிகளுக்கும் எனக்கு விலை உயர்ந்த ஆடைக் கொடுத்து அவர் மட்டும் "ஒரு சட்டை வாங்கினால் ஒரு சட்டை இலவசம் " கடையில் ஆடை எடுத்து அணிந்தார்.

6.எனக்கு வசதியான வாழ்க்கை தர அவர் மருத்துவ செலவுகளைக் கூட குறைத்துக் கொண்டார்.தன் உடல்நிலையை விட என் வாழ்க்கையில் அதிகம் அக்கறை காட்டினார்.

இன்று நான் பெற்றுவிட்ட எல்லாவற்றிற்கும் பின், எண்ணில் அடங்கா அவரின் இழப்பு இருக்கிறது.

என்னை சிலையாக்க தன்னை உளியாக்கி தியாகம் செய்த தாயுமானவர்
என் தந்தை..

எதற்காக எழுதினேன்...?

இதுவரை...

என்ன எழுதினேன்?
எதற்காக எழுதினேன்?
எழுதியவை
என்ன ஆயிற்று?

பின்னிரவில் பதுங்கும்
குற்றவாளியின்
அலையும் கண்களைப் போல
எதைத் தேடி
என் பேனா செல்கிறது...?

முன் தோன்றி
மூத்த தமிழின்
இலக்கண முகம்
அலங்கரித்து இருக்குமா?

தெருவோரம் திரியும்
எண்ணைப்பசை அற்ற
எண்ணற்ற குழந்தைகளில்
ஒருத்திக்காவது
தலை வாரிப் பூச்சூடி இருக்குமா?

எக்கணமும்
வறுமை தின்னும்
வயிற்றுக்கு
ஒரு வேளை
சோறு கிடைத்திருக்குமா?

எங்காவது ஒரு
சிட்டுக்குருவிக்கு
சிறகு முளைத்திருக்குமா?

எதிர்த்துப் போராடும்
எம் மாணவர்
ஏந்தும் பதாகையில்
எழுத ஒரு வாசகம்
கிடைத்திருக்குமா?

சொல்ல வாயும்
வார்த்தைகளும் அற்று
தவிக்கும் ஒரு இதயத்திற்கு
சொல்லும் வழியாகி
காதல் மொழியாகி இருக்குமா?

விரிந்து கொண்டிருக்கும்
ஓசான் ஓட்டைப் படலத்தின்
ஒரு துளி அடைக்க சமூகத்தை
முன்னெடுத்து இருக்குமா?

முகிழ்த்து
முன்னே வரத் துடிக்கும்
கைம்பெண் முன்
ஒப்பாரி வைப்பதைத் தவிர்த்து
அவள் கைப் பிடித்து
காலம் களிக்க ஒரு
நல் இதயம்
கிடைக்கச் செய்து இருக்குமா?

குறைந்த பட்சம்...
உழைத்துக் களைத்த
எம் பெரு மக்கட்கு
ஒரு துளி நேரம் பொழுது
போக்கக் கிடைத்திருக்குமா?

இருக்கும் விலைவாசியில்
இரண்டு சொட்டு மை ஒன்றும்
பெரிய செலவில்லை என்பதாலா...?
இன்னும் எழுதிக்கொண்டிருக்கிறேன்...

என் சபதங்கள்

  விடுமுறையாயினும் 
விடியல் முன் கண் விழிப்பேன். 
மார்கழி மாதத்திலும் கூட! 

பல் துலக்கியே பிறகே 
காபி அருந்துவேன். 
ஞாயற்று கிழமையும் கூட! 

குளித்தவுடன் குலதெய்வ 
வழிபாடு செய்வேன். 
அன்று ஏதொரு பிரச்சனைகள் 
இல்லை என்றாலும் கூட

கஷ்டப்பட்டாவது காலை உணவை 
கடவாயில் திணிப்பேன். 
அது உப்புசப்பின்றி இருந்தாலும் கூட! 

உயிரைக் கொடுத்தாவது 
உடற்ப் பயிற்சி மையம் செல்வேன். 
உயிர் நண்பன் வரவில்லை என்றாலும் கூட! 

மெனக் கெட்டாவது அலுவலகம் 
செல்வேன், குறித்த நேரத்தில். 
மேனேஜர் விடுப்பில் உள்ள போதிலும் கூட! 

கோழிக்கு பதில் பச்சை 
காய் கறிகள் உண்பேன். 
தலையில் கொம்பு முளைத்தாலும் கூட! 

வார வாரம் தண்ணி 
கொண்டு வண்டி துடைப்பேன். 
வண்டி வொர்க் ஷாப் சென்று 
வந்திருந்தாலும் கூட! 

தொலைக்காட்சியுடன் கொண்ட 
தொடர்பை துண்டிப்பேன். 
இன்டர்நெட் பழுதாய் இருந்தாலும் கூட! 

முகப் புத்தகத்தில் முங்கி முங்கி 
முத்தெடுக்க மாட்டேன். 
முல்லை பெரியாறு விவகாரம் முடிவுக்கு வந்தாலும் கூட! 

அறிவை பெருக்க தேடித் 
தேடி படிப்பேன். 
சுத்தமாக புரியவில்லை என்றாலும் கூட! 

தினந்தோறும் நடந்ததை 
டைரியில் பதிவு செய்வேன். 
அன்று முழுவதும் படுத்தே இருந்தாலும் கூட! 

முடிந்தவரை உண்மையே பேசுவேன். 
அலுவலகத்துக்கு லீவு 
கேட்கும் போது கூட! 

ஞாபகம் வரும்போதெல்லாம் 
காதலியிடம் அழகாய் இருகிறாய் என்பேன். 
பயமாய் இருந்தாலும் கூட! 

மிக முக்கியமாக, 
இந்த ஆண்டிலாவது எழுதிய 
இந்த காகிதத்தை தொலைக்காமல் 
பார்த்துக்கொள்வேன். 
கடைபிடிக்கவில்லை என்றாலும் கூட!!! 

கல்லூரித்தாயே!

கல்லூரித்தாயின் மடியில் சிலபொழுதுகள்... 
(நான்கு பாலைவன வருடங்களுக்குப் பிறகு நான் படித்த கல்லூரிக்குச் ஒருநாள் சென்றேன்....அன்று 
என்னுள் ஏற்பட்ட சில இனிமையான நிகழ்வுகளின் மொத்த தொகுப்பு இது.)

பல வருடங்கள் கழித்து தன் தாயைச் சந்திக்க சொந்த ஊருக்கு வருகின் ற ஒரு பாசமுள்ள மகனைப்போல்

நான் படித்த கல்லூரியின் வாசலை நெருங்க நெருங்க துடிக்கின்ற என் இதயம் விசும்ப ஆரம்பித்தது...

எத்தனை எத்தனை மாணவர்களின் கனவுகளை மொத்தமாய் சுமந்த கல்லூரி இது!

எத்தனை எத்தனை பாதச்சுவடுகளைத் தன் நெஞ்சில் தாங்கிய கல்லூரி இது!

எத்தனை எத்தனை நண்பர்களை உயிருக்குயிராக உருவாக்கிய கல்லூரி இது!

கல்லூரித்தாயே! 

உன் பிள்ளைகளில் ஒருவன் வந்திருக்கிறேன்.

உனக்கு என்னை அடையாளம் தெரிகிறதா? என்று மெதுவாய் முணுமுணுத்தேன்.

அப்போது எங்கிருந்தோ பறந்து வந்த இலையொன்று என் நெஞ்சில் மோதிவிட்டு
காற்றில் பறந்து போனது..

கையில் புத்தகங்களும்,நெஞ்சில் கனவுகளும் சுமந்து பட்டாம்பூச்சியாய் பறந்து
திரிந்த அந்த வசந்தகாலம் என் நினைவுமொட்டவிழ்ந்து பூவாய் மலரத் துவங்கியது...அந்த நாள் நினைவுகளில் மூழ்கியபடியே மெதுவாய் நாங்கள்
படித்த வகுப்பை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்....

இதோ.....எனக்கு கல்வியோடு நட்பையும் அள்ளி வழங்கிய என் வகுப்பறை!

அதோ...நான் தூரத்துவான் ரசிக்கும் ஜன்னல்!....மழை வந்தால் சாரலில் நனைய
நான் ஓடுகின்ற ஜன்னல் அல்லவா அது! 

என் ஜன்னல்த்தோழனே!

நலமா நீ?

எங்கே என் மரத்தோழன்?

கல்லூரியின் கடைசி நாளில் எல்லோரிடமும்
விடைபெறும் தருணத்தில் என் பிரிவு எண்ணி
இலைக்கண்ணீர் உதிர்த்தானே எங்கே அவனை?

தன்னிடம் யாரும் பேசுவதில்லை என்கிற ஏக்கத்தில்
பட்டுப்போனானோ என் பட்டு நண்பன்?

நான் அமர்ந்து படித்த அந்த ஜன்னலோர பெஞ்சில்
அமர்ந்தேன்.

சில வருடங்களுக்கு முன்பு வரை வாழ்க்கையின் கனம் தெரியாத
என்னைச் சுமந்த இடம் இது.

இங்கே நான் படித்திருக்கிறேன்,நட்பாகியிருக்கிறேன்,
கவிதை எழுதியிருக்கிறேன்,உறங்கியிருக்கிறேன்.நிலாரசித்திருக்கிறேன்...


இன்று உணர்வுகளால் பின்னப்பட்டு மெளனித்திருக்கிறேன்.
அதோ அமைதியாய் என்னைப் பார்த்துக்கொண்டிருக்கும் கரும்பலகை!

பல முறை உன்னை
உடைத்திருக்கிறேன்.

இன்று உன் முன்
உடைந்து நிற்கிறேன்.

உன்மேல் எழுதப்பட்ட எழுத்துக்களே இன்று
என் பெயருக்குப் பின் நான் எழுதுகின்ற எழுத்துக்கள்.

இது என்ன அஃறிணைகளுடன் பேச்சுவார்த்தையா
என்று அறிவு கேட்கிறது.

இந்த அஃறிணைகள்தான் உயர்திணைகளை உருவாக்கும் திண்ணைகள் என்கிறது மனம்.

பட்டாம்பூச்சியாய் பறந்து திரிந்த காலங்களை
நினைத்தாலே மனம் பட்டாம்பூச்சியாய்
படபடக்க ஆரம்பித்துவிடுகிறதே!


இது என்ன மனோநிலை? இதற்கென்ன பெயர்? 

பழகிய பால்ய நண்பனை பார்த்தவுடன் வார்த்தைகள் உறைந்துபோகுமே
அப்படி ஒரு அபூர்வ அழகிய மனோநிலையில் இருக்கிறேன் இப்போது.

ஆதங்க பொங்கல்

பொங்கல் 
 

தை திங்களில்
கதிரவனுக்கு
நன்றி சொல்ல
உழவனுக்கு
கிடைத்த வரம்
நம் தமிழருக்கு அது அறம்.

இன்றைய சுடான பொங்கல்.

பெயரும்
பண்டிகையும்
தனி அடையாளம் தமிழர்க்கு -அது
தவறி நூற்றாண்டு தாண்டியது.

இன்னுமும்
காலண்டரின் பின்புறம்
இந்துக்கள் பண்டிகையில் மட்டும்
பொங்கல்-அது
அச்சு வெல்லமில்லாத
அச்சு பிழையான பொங்கல் .

கதிர் சாய்ந்த நிலத்தில்
கட்டிய வீடு நிமிர்ந்து நிற்க
தண்ணீர் மின்சாரமில்லாத
கண்ணீர் பொங்கல் உழவனுக்கு.

இந்த செலவை
எதில் சரிகட்ட என்று
பட்ஜெட் போடும்
அளவானபொங்கல்
நடுத்தர குடும்பத்திற்கு.

எதையும்
வாங்க முடியாமல்
இரண்டு துண்டு
கரும்புடன்
கலை கட்டும்
பொங்கல் ஏழைக்கு.

ஓணத்தை போல
ஒற்றுமை இல்லை
பொங்கலில் என்ற
ஆதங்க பொங்கல் எனக்கு.

யாருமில்லாத பிறந்தநாள்

கண்ணாமூச்சி ரே..ரே...
காலம் இப்படித்தான்
இணைத்தது 
உன்னையும் என்னையும்..

அறிமுகம் வேறாயிருந்தாலும்
ஆழமான நட்புக்குத்தான்
வேர் விட்டேன்..

பொய்யும் புரட்டும்
சிறியதாய்..பாதகமில்லாமல்...
பொய்மையும் வாய்மையிடத்து..
வள்ளுவன் வாக்கை
உள்ளத்தில் வைத்தே
உன்னிடம் என் இதயத்தை
வைத்தேன்..

உன் இதயம் இரும்பால்
வடிக்கப்பட்டிருந்தால்
என் நட்பு நொறுங்கியிறுக்கும்..
நல்லவேளையாய்..
ஈரங்களின் மறுபதிப்பாய்..
மௌனங்களின் மொழியாய்..
பூக்களின் வாசமாய்..
ராகங்களின் ஸ்வரமாய்..
இப்படி இத(ய)மாய்
உன் இதயமிருந்ததால்
இன்று இனிய 
இத(மான)ய நண்பனாய் நீ..

இணைந்து பிறக்கவில்லை..
இதயங்கள் இணைந்தபின்
வருந்தவில்லை..

உன்னோடு குரல்சேர்த்து
நடைபோட்ட நாட்கள்
என்னை ஏங்கவைக்கின்றன
கரம்கோர்த்து நடவா தூரத்தில்
உ(எ)னை வைத்தபின்..

பறிமாறிக்கொள்ள
பல விஷயங்களிருந்தும்
பக்கமில்லாததால்
பரிதவிக்கிறது என் பரிதாப மனது..

வளமான உன் வாழ்க்கைக்கு
வழிசொல்ல வார்த்தைகளில்லை..
தோள்கொடுக்க தோளில்லாமலில்லை..

காலதேவனின்
காட்சிகள் சிலநேரங்களில்
கொடூரமாகத்தான்...
உன்னை கடல்கடத்தி
எங்கள் காலத்தை
கடத்த மறுக்கிறானே..

காதல் வெள்ளத்தில்
நீ நீந்துவதை
கண்டுமகிழ கண்கள்
காத்துக்கிடக்கின்றன...
உன் கனவுகளை
கலக்க கனிவாயொரு துணையில்லாமல்
கலங்குவாயென நினைக்கையில்
கண்ணீர் துளிகள்
கரைபுரளாமலில்லை..

உன் நிழலைக் காணாமல்
குரலால் இணைந்த கனம்
இன்றும் இதயத்தில்
இனிதாய் இம்சை செய்கிறது
இப்படி ஒரு உறவில்
கருவாகாமல் போயிருந்தால்
நம் நட்பு கள்ளமில்லாமல்
பிறந்து கண்ணியமாய் 
நடைபோட்டுக் கொண்டிருக்காதென
நினைக்கையில் கண்கள்
பனிக்க கரங்களை கூப்புகிறேன்
தொலைபேசியை நோக்கி...

உன் ஒவ்வொரு பிறந்தநாளும்
எனக்குள் இடியை இறக்குவதாய்..
ஆம்.. பிரிந்திருக்கும்
வருடங்களின் கணக்கில்
இன்னொன்றை 
இணைத்தால் தாங்குவதற்கு
இதயமென்ன இடிதாங்கியா?!!...

உனக்கு வாழ்த்துக்கள்
கூறப்போவதில்லை..
இன்றுமட்டும்
வாழ்த்துபவர்களுக்கு
இந்த நாளை நான் விட்டுவிடுவதால்..
உன்னை ஒவ்வொரு நாளும்
வாழ்த்தும் மனமாய் நானிருப்பதால்...

உனக்கு சிறப்பான வாழ்த்துக்கள்
கூறப்போவதில்லை..
சிறந்தவனாய் விளங்க வேண்டுமென
சிந்தையில் என்னாளும்
உன்னை சிந்தித்துக் கொண்டிருப்பதால்..

அருகிலிருந்தபோது
அலைகழித்தோம்
தொலைவில் போனபின்
தொங்குகிறோம்..
ஏங்கி ஏங்கி 
கண்கள் வீங்கவேண்டுமென
நம் நட்பு சாபமிட்டுவிட்டதுபோலும்..
ஆனாலும் 
அதற்கொரு நன்றி...
தொலைவில் உனை வைத்து
உறவுகள் இல்லாத நிலையில்
உனை தைத்து
எனை நினைக்கும் நிமிடங்களை
இன்னமும் கூட்டியமைக்கு....


சந்தோஷ தினத்தை
சாகடித்துவிட்டதாய்
உளறியிருந்தாய்..
சத்தம்போட்டு
நானழ உனக்கு விருப்பமா..

கலங்காதே நண்பா..
காலம் மாறும்
அடுத்தமுறை இணைவது
நம் கரங்கள்தாம்...

பணக்கார உலகம்

வன் இவன் என
ஏக வசனம் வேண்டாம்,
எட்டி மிதித்து அழிக்க
எல்லோருக்கும் கால்களுண்டு,
தலை குனிந்து நின்றவர்களுக்கு
தலை எடுக்கவும் தெரியும்..!!

பாகுபாடு பார்த்து
பகட்டு மனதோடு வாழும்
பணக்கார உலகம் இது,
பல்லை இளித்துக் கொண்டே
பகல் வேசம் போடும்
பேய்க் கூட்டம் இது ..!!

கை கூப்பி வணங்கி
கால் கழுவியவனுக்கு,
கழுத்தைப் பிடிக்க
கணப்பொழுது போதும்,
காற்றுக்கு புயலாக மாற
கற்று தர யாரும் தேவையில்லை..!

அடித்து அடித்தே
அடிமைகள் ஆக்கியிருக்கலாம்,
அரை வயிற்று கஞ்சிக்கு
அலைய விட்டிருக்கலாம் என,
அதிகார தோரணையில்
அடக்கி ஆண்டதெல்லாம்
அந்தக் காலம்...!!

முதலாளிகள் எல்லாம்
முதலில் ஓடி விடுங்கள்,
எஜமான்கள் எல்லாம்
எகிறி விடுங்கள்,
சிதறிப் போன
சிங்கங்கள் எல்லாம்
கோபம் சூழ்ந்து
கர்ஜிக்கப் போகின்றன..!!

ஏய் அதிகார வர்க்கமே
ஏமாளிகள் அல்ல நாங்கள்,
ஏணியாக இருந்து
ஏற்றிவிட்ட எங்களுக்கு
ஏறி மிதித்து
எதிர்க்கவும் தெரியும்..!!
இனிமேல்
எங்களின் எதிர்காலம்
எங்களின் கையில்..!!

தமிழ் மேல் காதல்

இதோ என்றும்போல இன்றும் கதிரவன்
துயிலெழுந்துவிட்டான்
இனியெல்லோரும் எறும்புக்கூட்டமாக‌
கொத்துக் கொத்தாக அலைவார்கள்.

நானும் தான் அலைகிறேன் எனது
வாழ்வாதாரமான வேலைக்காக‌,
பட்டம் பெற்ற பின்பும் அப்பாவின்
காசிலமர்ந்து சாப்பிடும்
நிலைக்குள்ளானவன் நான்.

காலம் இப்படியோடிக்கொண்டிருக்க‌
என் மனமோ காதல் வயப்பட்டுவிட்டது,
ஆம் நானும் காதலில் விழுந்துவிட்டேன்,

கவிதைகளேனும் எழுதிப் பிழைத்துக்
கொள்வோமென‌
காதல் வயப்பட்டுவிட்டேன்
"எனது தமிழ் மொழி"யின் மேல்.
இனி தமிழ் எனக்கு சோறுபோடும்.