20 ஆண்டுகளுக்கு மேலாக பாசன மேலாண்மை,நீர்தேக்க நிர்வாக துறைகளில் அனுபவம் கொண்ட ஒரு தலைவர் மற்றும் இரண்டு முழு நேர உறுப்பினர்களை மத்திய அரசு நியமிக்கும் . இது தவிர நீர்வளத்துறை தலைமைப்பொறியாளர் தகுதியில் உள்ள ஒருவரும், வேளாண் துறையில் ஆணையர் தகுதியில் உள்ள ஒருவரும் பகுதிநேரமாக நியமிக்கபடுவார்கள்
காவிரி நீரை பங்கிட்டு கொள்ளும் தமிழகம் கர்நாடகம் புதுச்சேரி கேரளா போன்ற மாநிலங்களுக்கு தலா ஒரு உறுப்பினர் இடம்பெறுவார். இந்த நான்கு மாநிலங்களையும் சேராத கண்காணிப்பு பொறியாளர் தகுதியில் உள்ள வெளிமாநிலத்தவர் ஒருவர் வாரியச்செயலாளராக நியமிக்கபடுவார்.. வாரிய செயலருக்கும் வாக்களிக்கும் உரிமை இல்லை
கர்நாடகாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி,ஹேமாவதி ஹேரங்கி
தமிழகத்தில் உள்ள மேட்டூர் பவானிசாகர்,அமராவதி
கேரளாவில் உள்ள பானாசுரசாகர் போன்ற காவிரி சார்ந்த அணைகள் அனைத்தும் வாரியத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும்
நிர்வாகம்,மேற்ப்பார்வை,மேலாண்மை,பராமரிப்பு என்று அனைத்தையுமே வாரியமே நிர்வகிக்கும்..
தீர்ப்பாயத்தின் தீர்ப்பையும் வாரியம் நடைமுறைப்படுத்தும் ..
உறுப்பினர்கள் எந்த நேரத்திலும் அணைகளுக்கு சென்று பார்வையிடலாம்
பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்து எதுவோ அதுவே வாரியத்தின் முடிவாக இருக்கும்...
No comments:
Post a Comment