Monday, 13 October 2014

ஏழை சிறுமி

முகாரி ராகத்தின்
முகவரி
நான்... !
வறுமை என்னும்
வீட்டின் வாசற்படிகள்
நான்...!

மாடுபோல உழைத்தாலும்
ஐம்பது ரூபாய் தினக்கூலி
எனக்கில்லை... !

சிறுவர்களை வேலைக்கு
சேர்க்காதீர் என
அரசு சொல்கிறது...!

பள்ளிக்கு சென்றால்
பாலும் ரொட்டியும்
காலை எனக்குண்டு... !
எனக்கு
பால் கொடுத்தவள் வயிற்றில்
மூவேளை ஈரத்துண்டு...!

குடிகார அப்பனுக்கு
காசு கொடுக்க...

புது வரவான தங்கச்சிக்கு
பால் கொடுக்க...

எனக்கு பால் கொடுத்த
அன்னைக்கு சோறு கொடுக்க...!

என்னை விட்டால்
யாருமில்லை... !
நான் தான்
குடும்பத் தலைவி...!


கெளதம் இளங்கோ 

No comments:

Post a Comment