Monday, 13 October 2014

வாடகை கனவு

கைவிடப்பட்ட 
கனவு ஒன்று 
என் சமீபத்திய நினைவுகளில் 
காட்சியாக வருகிறது..!! 

பச்சைப் பசேலென 
பாசி படர்ந்த 
நடை பாதையில் , 
அசட்டு சிரிப்புடன் 
கடந்து செல்கிறது அந்த 
கடந்த காலம்..!! 

உலர்ந்து போகும் 
முகத் திரைக்கும், 
வெளுத்துப் போகும் 
தலை முடிக்கும் 
முக்கால் பங்கு 
இடைவெளியில் தான் 
அந்த மூங்கில் நாட்கள் ..!! 

ஆங்காங்கே 
பாதரசம் உதிர்ந்த 
முகம் தெரியாத 
கண்ணாடி ஒன்று, 
கடந்த காலத்தை தின்று 
கர்வமாக ஏப்பம் விட்டிருந்தது..!! 

ஜன்னல் ஓரமாக 
காற்றில் ஆடியபடி 
பறந்து வரும் இலை, 
சருகாய் போகும் வரையுள்ள 
கால அளவு தான் 
விதியின் நாட்களுக்கும்....!! 

புரியாமையின் இந்த 
இருள் மூடிய இரவுகளை, 
அந்த வாடகைக் கனவு 
கண் திறந்து வைக்காமலே 
மர்மங்களுடன் 
நீண்டு சென்றது...

No comments:

Post a Comment