Sunday, 5 January 2020

Who Will Cry When You Die.? Book Review

ஒரு புத்தகத்த மனிதனா பிறந்த ஒவ்வொருத்தனும் வாசிக்கனும்னா அது இந்த புத்தகமா தான் இருக்கும்.. 
கண்டிப்பா எனக்கு தெரிஞ்ச எல்லாருக்கும் இந்த புத்தகம் வாங்கி படிக்க சொல்லுவேன். 
"WHO WILL CRY WHEN YOU DIE..?"
 by ROBIN SHARMA
இத தமிழ்ல சொன்ன 
"நீ செத்தா யாரு அழுக போறா.??" 
என்னடா இது தலைப்பே ஒரு நெகட்டிவிட்டி குடுக்குதுனு பாக்குறீங்களா… ஆனா நூறு சதவிகிதம் பாசிட்டிவிட்டி கருத்துக்கள அள்ளி குடுக்குற புத்தகம்.

ஒரு மனிதன் இதுவரை பயணித்த அவனோட வாழ்க்கையை அவனது அன்றாட சில பழக்க வழக்கங்களை மாற்றி அமைப்பதன் மூலம் இதுவரை கிடைத்த சந்தோசத்தை விட பல மடங்கு சந்தோசமாக வாழலாம் என்கிறார் இந்த எழுத்தாளர் ராபின் ஷர்மா..
அப்படி என்ன புது வழிய சொல்லபோறார் இவர்னு பாத்தா இது புதுசெல்லாம் இல்ல எப்பவுமே ஒரு மனுஷன் தன்னோட தப்ப உணரும் போதோ, இல்ல கொஞ்சம் நடைமுறை வாழ்க்கைய பத்தி யோசிக்கும் போதோ  மற்றும் அன்றாடம் செய்யுற சில சின்ன சின்ன விஷயங்கள் தான் அந்த வழிகள். 
உதாரணமா... ச்ச்சே இன்னிக்கு காலைல சீக்கிரம் எழுந்திரிச்சிருக்கலாம்.. அவருகிட்ட உண்மையா சொல்லிருக்கலாம், இன்னிக்கு பசங்கள வெளில கூட்டிட்டு போறோம்னு சொன்னோமே ஆனா டைம் இல்லையே.அந்த மேனேசர்கிட்ட கொஞசம் அமைதியா பேசிருக்கலாம். இப்புடி நமக்கு நாமே பேசிக்கிற கேட்டுக்குற விஷயங்கள தான் அவரு இந்த புத்தகத்துல சொல்லிருக்காரு..

தமிழ்ல ரஜினி நடிச்ச  பேட்ட படத்துல இளமை திரும்புதே பாட்டுல வர்ற ஒரு வரி "வாழ்க்கையே வாழத்தானே" அப்டிங்குற ஒரு பெரிய சித்தாந்த கருத்த 220 பக்கம் உள்ள புத்தகத்தில சொல்லிட்டாப்ள.. 
இந்த புத்தகத்துல அவரு வாழ்க்கையை  இப்படித்தான் வாழனும்னு சொல்லல மாறாக இப்டி வாழ்ந்து பாருங்க லைப் ஜாலியா இருக்கும்னு சொல்றாரு

இந்த புத்தகத்துல எழுத்தாளர் ராபின் சர்மா சந்தோசமா வாழ நூறு வழிமுறைகள் சொல்லிருக்காரு… அதுல எனக்கு பிடிச்ச சில முறைகள மட்டும் சொல்றேன் மீதி வழிமுறைகளை அந்த புத்தகம் வாங்கி படிச்சுக்கோங்க

1. நாம எல்லாரும் வழக்கமா பண்றது தான் “உங்களோட நீங்களே பேசிக்கிறது” மத்தவங்களோட அதிக நேரம் செலவு பண்றத விட்டுட்டு உங்களோ நீங்களே அதிக நேரம் செலவிடுங்க.. உங்களோட நீங்களே நெறைய பேசுங்க இது நமக்குள்ள இருக்குற சுயம் நீங்காம இருக்கும் அப்புறம் சுய கெளரவம் பெருகும்னு சொல்றாரு.

2. வேலை நேரத்துலயோ இல்ல குடும்பத்துடன் இருக்கும் போதோ  எதையாவது நினச்சு கவலைப்படாம… “கவலைப்படுறதுக்குனு தனியா ஒரு நேரம் ஒதுக்குங்க”. தினமும் ஒரு மணி நேரம் எடுத்துக்கிட்டு அந்த நேரத்துல உங்களோட கவலைகளை உங்களுக்குள்ளேயே பேசிக்கிட்டு அதுக்கான தீர்வு என்னே அப்டிங்கிறதையும் முடிவு பண்ணிட்டு அடுத்து போயி வேலைய பாருங்க.

3. பொய்கள் நிறைந்த இந்த உலகத்துல முடிஞ்ச அளவுக்கு உண்மையை மட்டும் பேசுங்க. அதாவது ஒரு வாரத்துக்கு உண்மை விரதம் இருந்து பாருங்க.

4. நேரத்தோட மதிப்பை தெரிஞ்சுக்க நேரம் தவறாம இருக்கணும்னு அவசியம் இல்ல.. நேரம் காலம் பாக்காம இருந்து பாருங்களேன் அதாவது ஒரு நாள் முழுக்க கடிகாரம் பாக்காம நேரம் தெரிஞ்சுகிறாம இருந்து பாருங்களேன்.

இந்த மாதிரி 100 விஷயங்கள் சொல்லிருக்காரு இதெல்லாம் நம்மளால செய்ய முடியுமான்னு கேக்காதீங்க கண்டிப்பா இந்த நூறு முறைகளும் நம்மால செய்ய முடியும்..

இப்போ இந்த புத்தகத்தோட தலைப்பை படிங்க

"WHO WILL CRY WHEN YOU DIE.?"
(Click this link to buy book Tamil edition)

"நீ செத்தா யாரு அழுக போறா.??"

அதனால இந்த உலகத்துல இன்னிக்கு தான் உன்னோட கடைசி நாள் அப்டினு நினச்சு ஒவ்வொரு நாளையும் ரசிச்சு வாழுங்கனு சொல்றாப்ல..!

இந்த புத்தகத்த படிச்சு முடிச்சதும் எனக்கு என்ன தோனுச்சுனா. "யார்ய்யா இந்த ராபின் சர்மா எனக்கே அந்தாள பாக்கனும் போல இருக்க"

நன்றி நல்வணக்கம்.
கௌதம் இளங்கோ

2 comments: