இல்லை
செயற்கையின் சதியோ..
எதுவாகினும் இறந்துவிட்டன
எத்தனையோ உயிர்கள்
ஆஸ்திரேலியாவின் பல்லுயிர் ஆர்வலரும் சிட்னி பல்கலைக்கழகத்தின் உயிரியல் பேராசிரியருமான கிறிஸ் டிக்மேன் நேற்று ஒரு மனதை உறைய வைக்கும் அறிக்கையை வெளியிட்டார் அதில் அவர் கூறியது :
ஆஸ்திரேலியாவின் நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் காடுகள் அழிக்கப்படுவதால் விலங்குகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து 2007ஆம் ஆண்டு இயற்கைக்கான உலகளாவிய நிதியத்துக்காக (WWF) தான் மற்ற ஆய்வாளர்களுடன் இணைந்து எழுதிய அறிக்கைதின் கணக்கெடுப்புப்படி கடந்த முன்று மாதங்களாக பரவிவரும் காட்டுத்தீயில் இதுவரை 50 கோடி உயிரினங்கள் உயிரிழந்திருப்பதாக தெரிவித்துள்ளார்...
துல்லியமாக எப்படி 50 கோடி என்கிறீரகள் என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்துள்ளார்
ஒரு ஹெக்டேருக்கு சராசரியாக 17.5 பாலூட்டிகள், 20.7 பறவைகள், 129.5 ஊர்வன ஆகியவை வாழ்வதாக குறிப்பிடப்பட்டுள்ள அந்த அறிக்கையின் தரவை தற்போது காட்டுத்தீ ஏற்பட்டுள்ள பரப்புக்கு கணக்கீடு செய்வதன் மூலம் இந்த எண்ணிக்கை கிடைத்துள்ளதாக கிறிஸ் கூறுகிறார்.
பெரிய விலங்கினங்களான கங்காரு, ஈமு மற்றும் பல்வேறு வகையான பறவைகள் ஆகியவை தங்களை நோக்கி தீ வருவதை பார்த்து சம்பவ இடத்திலிருந்து தப்பி சென்றிருக்கக் கூடும்
ஆனால் அதிக தூரம் இடம்பெயர முடியாத மற்றும் காடுகளை மட்டுமே சார்ந்து வாழும் சிறிய உயிரிகள் மற்றும் ஊர்வன வகை உயிரினங்கள் இந்த காட்டுத்தீயில் சிக்கி என்ன ஆகியிருக்கும் என்று நான் அஞ்சுகிறேன்."
இந்நிலையில், ஆஸ்திரேலியா முழுவதும் கட்டுக்கடங்காமல் பரவி வரும் காட்டுத்தீயில் தப்பிய பெரும்பாலான விலங்குகள் போதிய இடம், உணவு இல்லாமல் உயிரிழக்கக் கூடும் என்று அவர் எச்சரிக்கிறார்.
இந்நிலையில் சின வனவிலங்கு ஆர்வலர்களின் அறிக்கைகளும் புகைப்படங்களும் நெஞ்சை உறைய வைக்கின்றன..
இந்த இயற்கை அன்னை சகல உயிர்களுக்குமான தேவையை தந்துவிடுகிறாள்
ஆனால்
இந்த மனிதனின் பேராசைக்கு தரமுடியாமல தவிக்கிறாள்
அப்படி மனிதனின் ஆக்கிரமிப்பு பேராசையால் முன்பு அமேசான் போல தற்போது ஆஸ்திரேலியக் காடுகள தீக்கிரையாகின்றன..
யாரோ சிலரின் சுய லாபத்துக்காக இப்படி சூறையாடப்படும் காடுகளும் அதைச் சார்ந்து வாழும் பழங்குடி மக்களும் பழம்பெரும் உயிரினங்களின் வாழ்வாதாரம் இனி கேள்விக்குறிதான்..
காட்டுத்தீ பற்றி கத்திக் கதைப்போர் மத்தியில்
அந்த தீ பற்றியது எப்படி.?
பரவியது எப்படி.?
யார் அறிவார்..??
தீயில் சிக்கிய உயிரகளை போராடி மீட்டுவரும் தீனணைப்பு வீரர்களுக்கும் தன்னார்வலர் மீட்புப்பணி குழுவுக்கும் எம் நன்றிகள்
Very saddening !
ReplyDelete