2009க்கு முன்பு,
நானும் உங்களைப்போலவே, உங்களைவிட அதிகமாகவே, இந்திய குடியரசு தினத்தை, இந்திய சுதந்திர தினத்தை பெருமையாக கொண்டாடியவன் தான், இந்திய நாட்டுக் கொடியை சட்டையில் குத்திக் கொண்டவன் தான், தெருத்தெருவாக தேடிப்போய், அன்று குடியரசு தினம், சுதந்திர தினம் என்பதே தெரியாத பாமரர்களுக்கு கொடி கொடுத்தவன் தான், குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்தவன் தான்.....
நானும் உங்களைப்போலவே, உங்களைவிட அதிகமாகவே, இந்திய குடியரசு தினத்தை, இந்திய சுதந்திர தினத்தை பெருமையாக கொண்டாடியவன் தான், இந்திய நாட்டுக் கொடியை சட்டையில் குத்திக் கொண்டவன் தான், தெருத்தெருவாக தேடிப்போய், அன்று குடியரசு தினம், சுதந்திர தினம் என்பதே தெரியாத பாமரர்களுக்கு கொடி கொடுத்தவன் தான், குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்தவன் தான்.....
2009க்கு முன்பு,
இந்தியா என் நாடு, இது என் குடியரசு தினம், இது என் சுதந்திர தினம் என்று கொண்டாடிய போதெல்லாம், எனக்கு இந்தியாவின் மத்திய ஆட்சி மீது எந்தவொரு கோபமும் இல்லை, வெறுப்பும் இல்லை, குறைகள்இல்லை என்று நினைத்து விடாதீர்கள். அப்போதும் இருந்தது.....
இந்தியா என் நாடு, இது என் குடியரசு தினம், இது என் சுதந்திர தினம் என்று கொண்டாடிய போதெல்லாம், எனக்கு இந்தியாவின் மத்திய ஆட்சி மீது எந்தவொரு கோபமும் இல்லை, வெறுப்பும் இல்லை, குறைகள்இல்லை என்று நினைத்து விடாதீர்கள். அப்போதும் இருந்தது.....
எங்கள் தாய்மொழிக்கு கொடுக்க வேண்டிய நியாயமான அங்கீகாரத்தை நீங்கள் கொடுக்காத கோபம் இருந்தது...
எங்கள் தாய்மண்ணில் நீங்கள் உங்கள் மொழியை திணிப்பதில் கோபம் இருந்தது...
எங்கள் மாநிலத்தின், தமிழ்நாட்டின் தொழில்துறையை நீங்கள் பல சட்டங்கள் போட்டு முடக்கியதில் கோபம் இருந்தது....
எங்கள் கச்சத்தீவை - உங்கள் நட்பு நாட்டுக்கு தாரைவார்த்த கோபம் இருந்தது....
எங்களுக்கு நியாயப்படி கிடைக்க வேண்டிய காவேரி நதிநீரை, ஆராய்ச்சி குழு, விசாரணை குழு, விசாரணை ஆணையம், நீதிமன்றம் என்று போட்டு இழுத்தடித்ததில் கோபம் இருந்தது....
எங்கள் தமிழ்நாட்டு மீனவர்களை, உங்கள் நட்பு நாடு சுட்டுக் கொல்வதை தட்டிக் கேட்காததில் கோபம் இருந்தது....
எங்கள் தமிழ்நாட்டில் நீங்கள் வசூலிக்கும் வரிகளில், எங்களுக்கு நியாயமான பங்கு கொடுக்காமல், உங்களுக்குப் பிடித்த மாநிலங்களுக்கு வாரி வழங்கியதில் கோபம் இருந்தது.....
இப்படி சொல்லிக்கொண்டே போனால், இதுபோன்ற ஆயிரம் கோபங்களையும் அதற்கான காரணங்களையும் என்னால் அடுக்கிக்கொண்டே போகமுடியும்....
ஆனாலும், அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு, பல்லைக் கடித்துக்கொண்டு, இந்தியா எங்கள் நாடு, இது எங்கள் குடியரசு தினம், இது எங்கள் சுதந்திர தினம் என்று தான் இருந்தேன்.....
ஆனாலும், அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு, பல்லைக் கடித்துக்கொண்டு, இந்தியா எங்கள் நாடு, இது எங்கள் குடியரசு தினம், இது எங்கள் சுதந்திர தினம் என்று தான் இருந்தேன்.....
அது என்ன 2009 மட்டும் அப்படியொரு மாற்றத்தைக் கொண்டுவந்து விட்டது என்று நீங்கள் கேட்கலாம்.... ஆமாம், தமிழீழ இனப்படுகொலை தான் எனக்குள் மிகப்பெரிய மாறுதலை ஏற்படுத்தியது...
இந்தியா எனக்கான நாடு இல்லை, இந்தியா எங்கள் உணர்வுகளை மதிக்காது, இந்தியாவுக்கு நாங்கள் முக்கியம் இல்லை என்ற உண்மையை, நடுமண்டையில் ஆணி அடித்து உணர்த்திய தருணம் அதுதான்....
இந்தியா எனக்கான நாடு இல்லை, இந்தியா எங்கள் உணர்வுகளை மதிக்காது, இந்தியாவுக்கு நாங்கள் முக்கியம் இல்லை என்ற உண்மையை, நடுமண்டையில் ஆணி அடித்து உணர்த்திய தருணம் அதுதான்....
உங்கள் நட்பு நாடு, உள்நாட்டுப் போரில் சிதறிவிடக் கூடாது என்று நீங்கள்,
இராணுவ ஆலோசனைகள் வழங்கியதில் எனக்கு கோபம் இல்லை,
இராணுவப் பயிற்சி வழங்கியதில் எனக்கு கோபம் இல்லை,
இராணுவ தளவாடங்களை வழங்கியதில் கோபம் இல்லை,
இராணுவ வீரர்களை அனுப்பியதிலும் எனக்கு கோபம் இல்லை. அது ஏன், ஒட்டுமொத்த இந்திய இராணுவத்தை அனுப்பி இருந்தாலும் கோபம் வந்திருக்கப் போவதில்லை.....
இராணுவ ஆலோசனைகள் வழங்கியதில் எனக்கு கோபம் இல்லை,
இராணுவப் பயிற்சி வழங்கியதில் எனக்கு கோபம் இல்லை,
இராணுவ தளவாடங்களை வழங்கியதில் கோபம் இல்லை,
இராணுவ வீரர்களை அனுப்பியதிலும் எனக்கு கோபம் இல்லை. அது ஏன், ஒட்டுமொத்த இந்திய இராணுவத்தை அனுப்பி இருந்தாலும் கோபம் வந்திருக்கப் போவதில்லை.....
என்னுடைய கோபம் எல்லாம்,
இலங்கையில் உள்நாட்டுப் போர் நடக்கும்போது, இலங்கை அரசின் இராணுவம் பொதுமக்களின் வசிப்பிடங்களை குண்டு வீசி தாக்கும்போது, போர் நடக்கும் இடங்களை விட்டு அகதிகளாக வெளியேறிய பொதுமக்கள் மீது குண்டுகள் வீசிய தாக்கிய போது, அதைத் தடுப்பதற்கு நீங்கள் எதாவது நடவடிக்கைகள் எடுத்தீர்களா? ஐக்கிய நாடுகள் சபையில் கவனீர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வந்தீர்களா? அண்டை நாடுகளுடன், சர்வதேச நாடுகளுடன் பேசி, பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்க முயற்சிகள் செய்தீர்களா? .... அங்கே கொல்லப்படுபவர்கள் , உங்கள் நாட்டில் வசிக்கும் இனங்கள் ஒன்றின் உறவுகள் என்பதை நினைத்துப் பார்த்தீர்களா?
தமிழ்நாட்டில் நாங்கள் போராடியது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, நாங்கள் கதறியதாவது உங்கள் காதில் கேட்டதா? .........
இலங்கையில் உள்நாட்டுப் போர் நடக்கும்போது, இலங்கை அரசின் இராணுவம் பொதுமக்களின் வசிப்பிடங்களை குண்டு வீசி தாக்கும்போது, போர் நடக்கும் இடங்களை விட்டு அகதிகளாக வெளியேறிய பொதுமக்கள் மீது குண்டுகள் வீசிய தாக்கிய போது, அதைத் தடுப்பதற்கு நீங்கள் எதாவது நடவடிக்கைகள் எடுத்தீர்களா? ஐக்கிய நாடுகள் சபையில் கவனீர்ப்பு தீர்மானங்கள் கொண்டு வந்தீர்களா? அண்டை நாடுகளுடன், சர்வதேச நாடுகளுடன் பேசி, பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்க முயற்சிகள் செய்தீர்களா? .... அங்கே கொல்லப்படுபவர்கள் , உங்கள் நாட்டில் வசிக்கும் இனங்கள் ஒன்றின் உறவுகள் என்பதை நினைத்துப் பார்த்தீர்களா?
தமிழ்நாட்டில் நாங்கள் போராடியது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லை என்றாலும் பரவாயில்லை, நாங்கள் கதறியதாவது உங்கள் காதில் கேட்டதா? .........
பாக்கிஸ்தானில் பஞ்சாபிகள் இப்படி இனப்படுகொலை செய்யப்பட்டால், அதற்குப்பிறகு பஞ்சாப் என்ற மாநிலம் இந்தியாவில் இருக்குமா?
நேப்பாளில் மதேசிகள் இப்படி இனப்படுகொலை செய்யப்பட்டால், அதற்குப்பிறகு உத்தரபிரதேசம், பிகார் என்ற மாநிலங்கள் இந்தியாவில் இருக்குமா?
பங்களாதேசில் வங்காளிகள் இப்படி இனப்படுகொலை செய்யப்பட்டால், அதற்குப்பிறகு மேற்கு வங்காளம் என்ற மாநிலம் இந்தியாவில் இருக்குமா?
சொல்லுங்கள்....
நீங்களே சொல்லுங்கள்....
நேப்பாளில் மதேசிகள் இப்படி இனப்படுகொலை செய்யப்பட்டால், அதற்குப்பிறகு உத்தரபிரதேசம், பிகார் என்ற மாநிலங்கள் இந்தியாவில் இருக்குமா?
பங்களாதேசில் வங்காளிகள் இப்படி இனப்படுகொலை செய்யப்பட்டால், அதற்குப்பிறகு மேற்கு வங்காளம் என்ற மாநிலம் இந்தியாவில் இருக்குமா?
சொல்லுங்கள்....
நீங்களே சொல்லுங்கள்....
இந்தியா - இந்தியன் என்ற உணர்வில் இருந்து என்னை அன்னியப்படுத்தியது இந்தியா அரசு தான்
தவறு இந்தியாவின் மேல் தான்....
இது என்னுடைய தவறு இல்லை...
தவறு இந்தியாவின் மேல் தான்....
இது என்னுடைய தவறு இல்லை...
இப்போதும் காலம் கடந்துவிடவில்லை....
1. இந்தியா என்ற கூட்டமைப்பு நாட்டின் முதல் செம்மொழியும், மிகப் பழமையான மொழியுமான தமிழை, இந்திய கூட்டமைப்பு நாட்டின் அலுவல் மொழியாக அறிவியுங்கள்...
2. தமிழ்நாடு அரசின் அலுவல் மொழிச் சட்டத்திற்கு புறம்பாக, உங்கள் இந்தி மொழியை தமிழ்நாட்டில் திணிப்பதை நிறுத்துங்கள்.
3. தமிழ்நாடு மாநிலத்தின் தொழில்துறைகளை, இயற்கை வளங்களை நிர்வகிக்கும் உரிமைகளை தமிழ்நாட்டு அரசுக்கு கொடுங்கள். அணுவுலை வேண்டுமா, ஆயுத உலை வேண்டுமா, எரிவாயு வேண்டுமா, எரிந்து சாக வேண்டுமா என்பதை தமிழ்நாட்டு மக்களே தீர்மானிக்கட்டும்....
4. தமிழ்நாடு சட்டமன்றத்தின் - அரசின் அனுமதி இல்லாமல் இலங்கைக்கு நீங்கள் கொடுத்த கச்சத்தீவை, உங்கள் நட்பு நாட்டிடம் இருந்து திரும்பி வாங்குங்கள். உங்களால் முடியவில்லை என்றால், சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை மீது தமிழ்நாடு அரசு வழக்கு தொடர, பாராளுமன்ற அனுமதி வழங்குங்கள்.
1. இந்தியா என்ற கூட்டமைப்பு நாட்டின் முதல் செம்மொழியும், மிகப் பழமையான மொழியுமான தமிழை, இந்திய கூட்டமைப்பு நாட்டின் அலுவல் மொழியாக அறிவியுங்கள்...
2. தமிழ்நாடு அரசின் அலுவல் மொழிச் சட்டத்திற்கு புறம்பாக, உங்கள் இந்தி மொழியை தமிழ்நாட்டில் திணிப்பதை நிறுத்துங்கள்.
3. தமிழ்நாடு மாநிலத்தின் தொழில்துறைகளை, இயற்கை வளங்களை நிர்வகிக்கும் உரிமைகளை தமிழ்நாட்டு அரசுக்கு கொடுங்கள். அணுவுலை வேண்டுமா, ஆயுத உலை வேண்டுமா, எரிவாயு வேண்டுமா, எரிந்து சாக வேண்டுமா என்பதை தமிழ்நாட்டு மக்களே தீர்மானிக்கட்டும்....
4. தமிழ்நாடு சட்டமன்றத்தின் - அரசின் அனுமதி இல்லாமல் இலங்கைக்கு நீங்கள் கொடுத்த கச்சத்தீவை, உங்கள் நட்பு நாட்டிடம் இருந்து திரும்பி வாங்குங்கள். உங்களால் முடியவில்லை என்றால், சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை மீது தமிழ்நாடு அரசு வழக்கு தொடர, பாராளுமன்ற அனுமதி வழங்குங்கள்.
5. காவேரி நடுவர் மன்றத் தீர்பின்படி, இந்திய அரசின் அரசாணைப்படி, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, உடனடியாக #காவேரி மேலாண்மை வாரியத்தை அமையுங்கள்.... முடியவில்லை என்றால், சர்வதேச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மீது தமிழ்நாடு அரசு வழக்கு தொடர, பாராளுமன்ற ஒப்புதல் வழங்குங்கள்.
6. தமிழ்நாட்டு மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை உங்கள் நட்பு நாட்டிடம் அன்பாக சொல்லுங்கள். கேட்கா விட்டால், சர்வதேச கடல்சார் நீதிமன்றத்தில் வழக்குத் தொடருங்கள். முடியா விட்டால், தமிழ்நாடு அரசு சர்வதேச கடல்சார் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என்று பாராளுமன்ற ஒப்புதல் வழங்குங்கள்....
7. எங்களிடம் இருந்து வசூலிக்கும் வரியில், கூ்டமைப்பு நாட்டின் நிர்வாகத்தை நடத்துவதற்கு தேவையான மொத்தச் செலவை, தமிழ்நாடு மக்கள்தொகை விகிதாச்சாரப்படி, அல்லது நிலப்பரப்பு விகிதாச்சாரப்படி எடுத்துக்கொண்டு மீதத்தொகையை திருப்பிக் கொடுங்கள்...
இன்னும் நிறைய இருக்கு... முதல்கட்டமாக இவற்றையாவது செய்யுங்கள்....
செய்தீர்கள் என்றால், எனக்கும்,
இந்தியா என் நாடு தான்,
இது என் குடியரசு தினம் தான்,
இது என் சுதந்திர தினம் தான் என்ற உணர்வு மீண்டும் வரும்... கொண்டாட தோன்றும்...
செய்தீர்கள் என்றால், எனக்கும்,
இந்தியா என் நாடு தான்,
இது என் குடியரசு தினம் தான்,
இது என் சுதந்திர தினம் தான் என்ற உணர்வு மீண்டும் வரும்... கொண்டாட தோன்றும்...
இல்லையென்றால், பிரிட்டிஷ் இந்தியா என்ற நாட்டுக்கும், இந்திய குடியரசு என்ற நாட்டுக்கும் எனக்குள் ஒரு வேறுபாடும் இல்லை....
நேற்று,
பாக்கிஸ்தான் நாட்டின் சுதந்திரதினத்திற்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கும்,
இன்று,
இந்தியா நாட்டின் சுதந்திரதினத்திற்கு வாழ்த்துகள் சொல்வதிலும்
ஒரு வேறுபாடும் கிடையாது
நேற்று,
பாக்கிஸ்தான் நாட்டின் சுதந்திரதினத்திற்கு வாழ்த்துக்கள் சொன்னதற்கும்,
இன்று,
இந்தியா நாட்டின் சுதந்திரதினத்திற்கு வாழ்த்துகள் சொல்வதிலும்
ஒரு வேறுபாடும் கிடையாது
இப்படிக்கு
Anti -Indians , பொறுக்கிகள், தேசத்துரோகிகள்,தீவிரவாதிகள்,சமூகவிரோதிகள்..
No comments:
Post a Comment